சனவரி 1 (January 1) என்பதுகிரெகொரியின் நாட்காட்டியில் ஆண்டின் முதலாவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 நாட்கள் (நெட்டாண்டுகளில் 365 நாட்கள்) உள்ளன. இந்நாள்புத்தாண்டு நாள் எனவும் அழைக்கப்படுகிறது.
வரலாறு
ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்தநடுக்காலப் பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் ஆரம்ப நாளாக திசம்பர் 25 (இயேசுவின் பிறப்பு), மார்ச்சு 1, மார்ச்சு 25 (இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு), அல்லதுஉயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறித்தவத் திருவிழா நாட்களைத் தேர்ந்தெடுத்தன. மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செப்டம்பர் முதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாகத் தேர்ந்தெடுத்தன.
12ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை இங்கிலாந்தில் மார்ச்சு 25இல் ஆண்டுத் தொடக்கமாக இருந்தது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள்கிரெகொரியின் நாட்காட்டியைப் பின்பற்றுவதற்கு முன்னரேயே சனவரி 1 ஐ ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடின. எடுத்துக்காட்டாக,இசுக்கொட்லாந்து 1600 இல் சனவரி 1 ஐ புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தது. இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள்நாட்காட்டிச் சட்டம், 1750 இன் படி, 1752இல் புத்தாண்டை சனவரி 1 இற்கு மாற்றின. அதே ஆண்டின் செப்டம்பரில், பிரித்தானியா, மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில்கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகமானது.
சனவரி 1 அதிகாரபூர்வமான ஆண்டுத் தொடக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலக்கோடு பின்வருமாறு:
நிகழ்வுகள்
- கிமு 45 –உரோமைப் பேரரசில்யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- கிமு 42 –உரோமை மேலவையூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது.
- 1001 – முதலாம் இசுடீவன்அங்கேரியின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டார்.
- 1068 – நான்காம் ரொமானசுபைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
- 1502 –போர்த்துக்கீச நாடுகாண் பயணிபெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால்பிரேசில் நாட்டின்இரியோ டி செனீரோ நகரை அடைந்தார்.
- 1515 – பன்னிரண்டாம் லூயி இறந்ததை அடுத்து, அவரது மருமகன் 20-அகவையில் முதலாம் பிரான்சிசுபிரான்சின் மன்னராக முடி சூடினான்.
- 1600 –இசுக்கொட்லாந்து மார்ச் 25 இற்குப் பதிலாக சனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.
- 1651 –இரண்டாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
- 1700 –உருசியாஅனோ டொமினி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தது.
- 1707 –போர்த்துகல்லின் மன்னராக ஐந்தாம் சான் முடிசூடினார்.
- 1752 –கிரிகோரியன் நாட்காட்டியைபிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
- 1772 – 90ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள்காசோலைஇலண்டனில் விற்பனைக்கு வந்தது.
- 1776 –அமெரிக்கப் புரட்சிப் போர்:அரச கடற்படை மற்றும்அமெரிக்க விடுதலைப் படையினரின் நடவடிக்கையினால்வரிசீனியாவின் நோர்போக் நகரம் தீப்பற்றி அழிந்தது.
- 1788 –தி டைம்சு முதல் இதழ் இலண்டனில் வெளியிடப்பட்டது.
- 1800 –டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
- 1801 –சிறுகோள் பட்டையில் காணப்படக்கூடிய மிகப்பெரும் பொருள்சியரீசுகியூசெப்பே பியாசி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1801 –பெரிய பிரித்தானிய இராச்சியம்,அயர்லாந்து இராச்சியம் இணைந்துபெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் ஆனது.
- 1804 –எயிட்டியில்பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுவே முதலாவது கறுப்பினக் குடியரசும், வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது விடுதலை பெற்ற நாடும் ஆகும்.
- 1808 –ஐக்கிய அமெரிக்காவில்அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.
- 1833 –ஐக்கிய இராச்சியம்போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.
- 1858 –இலங்கையில் முதலாவதுதந்திச் சேவைகொழும்புக்கும்காலிக்கும் இடையில் ஆரம்பமானது.[1]
- 1866 –யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை அமைக்கப்பட்டது.[1]
- 1867 –ஐக்கிய அமெரிக்காவில்ஒகையோவின் "சின்சினாட்டி" நகருக்கும்கென்டக்கியின் "கொவிங்டன்" நகருக்கும் இடையில் சான் ஏ. ரோப்லிங்தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.
- 1872 –இலங்கையில்ரூபாய், மற்றும்சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[1]
- 1872 – முதலாவதுஇந்திய அஞ்சல்ஆல்ப்சின் சேனீ மலைச் சுரங்கம் ஊடாக சென்றது.[1]
- 1877 –இந்தியாவின் மகாராணியாகவிக்டோரியாதில்லியில் அறிவிக்கப்பட்டார்.[1]
- 1883 –இலங்கையின் தமிழர் தாயகம்வடக்கு,கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
- 1886 –பர்மாவிக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
- 1890 –எரித்திரியாஇத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.
- 1893 –யப்பானில்கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1899 –கியூபாவில்எசுப்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
- 1901 –நைசீரியாபிரித்தானியாவின் முதலாவது காப்பரசானது.
- 1901 –பிரித்தானியக் குடியேற்ற நாடுகளானநியூ சவுத் வேல்சு,குயின்சுலாந்து,விக்டோரியா,தாசுமேனியா,மேற்கு ஆத்திரேலியா ஆகியனஆத்திரேலியப் பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.
- 1906 –பிரித்தானிய இந்தியாவில்இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1911 –வட மண்டலம்தெற்கு ஆத்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டுஆத்திரேலியா நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
- 1912 –சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1919 –சுகொட்டுலாந்தில் அயோலயர் என்ற கப்பல் மூழ்கியதில் 205 பேர் உயிரிழந்தனர்..
- 1927 –மெக்சிக்கோவில்கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.
- 1927 –துருக்கிகிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி1926,டிசம்பர் 18 இற்கு அடுத்த நாள் சனவரி 1,1927 ஆக மாற்றப்பட்டது.
- 1928 –யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரானபோரிஸ் பசனோவ்சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னைவிடுவித்துக் கொள்ள எல்லை கடந்துஈரான் சென்றார்.
- 1935 –இத்தாலியக் குடியேற்ற நாடுகளானதிரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்துலிபியா ஆகியன.
- 1945 –இரண்டாம் உலகப் போர்:மால்மெடி படுகொலைகளுக்கு எதிர்த்தாக்குதலாக அமெரிக்காபெல்ஜியத்தில் 60நாட்சி ஜெர்மனி போர்க் கைதிகளைக் கொன்றது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்:செருமனியின்வான்படை வடக்கு ஐரோப்பாவில்நேச நாடுகளின் வான் படைகளை அழிக்கும் நோக்குடன்போடன்பிளாட் நடவடிக்கையை மேற்கொண்டது.
- 1947 –பனிப்போர்:இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்டசெருமனியின்பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர்ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது.
- 1948 –பிரித்தானியதொடருந்து சேவைகள்தேசியமயமாக்கப்பட்டன.
- 1948 – பிரிவினைக்குப் பின்னர்பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550மில்லியன்ரூபாய் பணத்தைஇந்தியா தரமுடியாதென அறிவித்தது.
- 1949 –ஐநா அறிவுறுத்தலின் படிகாஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒருநிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படிபாகிஸ்தானுடனானஇந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
- 1956 –எகிப்து மற்றும்பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்துசூடான் விடுதலை பெற்றது.
- 1958 –இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில்சிங்கள மொழியில் ශ්රී (ஸ்ரீ) எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
- 1958 –இலங்கையில்பேருந்து சேவை தேசியமயமாக்கப்பட்டது.[2]
- 1958 –ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது.
- 1959 –கியூபப் புரட்சி:கியூபாவின் அரசுத்தலைவர்புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாபிடெல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1960 –பிரான்ஸ் மற்றும்பிரித்தானியாவிடம்கமரூன் இருந்து விடுதலை பெற்றது.
- 1962 –சமோவாநியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1964 – ரொடீசியா, னியாசாலாந்து கூட்டமைப்பு கலைக்கப்பட்டுசாம்பியா,மலாவி ஆகிய இரு சுதந்திர நாடுகளாகவும்,ரொடீசியா என்ற பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடாகவும் மூன்றாகப் பிரிக்கப்பட்டது.
- 1971 – அமெரிக்கத்தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.
- 1973 –டென்மார்க்,அயர்லாந்து,ஐக்கிய இராச்சியம் ஆகியன ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைந்தன.
- 1978 –துபாய் நோக்கிப் புறப்பட்டஏர் இந்தியா 855 போயிங் 747 விமானம் வெடித்துபம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 190 பயணிகள் உட்பட அனத்து 213 பேரும் உயிரிழந்தனர்.
- 1979 –சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தூதரக உறவு நடைமுறைக்கு வந்தது.
- 1981 –கிரேக்கம் ஐரோப்பிய சமூகத்துடன் இணைந்தது.
- 1981 –பலாவுக் குடியரசுஐக்கிய அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.
- 1983 –அர்ப்பாநெட் தனது மூலபிணைய நெறிமுறைகளைஇணைய நெறிமுறையாக மாற்றியது இன்றையஇணையத்தின் தொடக்கத்திற்குக் காரணமானது.
- 1984 –புரூணைஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1985 –பிரித்தானியாவில் முதன் முதலில்செல்பேசித் தொடர்பைவோடபோன் நிறுவனம் ஏற்படுத்தியது.
- 1989 –ஓசோன் குறைபாட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைத் தடை செய்யும் மொன்ட்ரியால் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
- 1993 –செக்கோசிலவாக்கியா நாடுசெக் குடியரசு,சிலோவாக் குடியரசு என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.
- 1995 –ஆஸ்திரியா,பின்லாந்து,சுவீடன் ஆகியனஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
- 1995 –உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1999 – 11ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில்யூரோ நாணயம் அறிமுகமானது.
- 2007 –பல்காரியா,உருமேனியா ஆகியனஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
- 2007 –இந்தோனேசியாவின்மாக்காசார் நீரிணைப் பகுதியில் ஆடம் ஏர் 574 விமானம் 102 பேருடன் மூழ்கியது.
- 2008 –கொழும்பில்ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- 2009 –தாய்லாந்து,பேங்காக் நகரில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 66 பேர் உயிரிழந்தனர்.
- 2010 –பாக்கித்தானில்கைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
- 2011 –எகிப்து,அலெக்சாந்திரியாவில்கோப்து கிறித்தவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
- 2011 –எசுத்தோனியாயூரோ நாணயத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
- 2013 –கோட் டிவார்,அபிஜான் நகரில் விளையாட்டரங்கொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
- 2015 –உருசியா,பெலருஸ்,ஆர்மீனியா,கசக்கஸ்தான்,கிர்கிசுத்தான் ஆகிய நாடுகள் இணைந்து யூரேசியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பை நிறுவின..
- 2017 –துருக்கியின்இஸ்தான்புல் நகரில் இரவு இடுதி ஒன்றின் மீதுநடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1484 –உல்ரிச் சுவிங்கிளி, சுவிட்சர்லாந்து இறையியலாளர் (இ.1531)
- 1548 –கியோர்டானோ புரூணோ, இத்தாலியக் கணிதவியலாளர், கவிஞர் (இ.1600)
- 1697 –யோசப் பிரான்சுவா தூப்ளே, இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுநர் (இ.1763)
- 1852 –உசான்-அனத்தோல் தெமார்சே, பிரான்சிய வேதியியலாளர் (இ.1904)
- 1863 –பியர் தெ குபர்த்தென், பிரான்சிய வரலாற்றாளர்,பன்னாட்டு ஒலிம்பிக் குழுவை அமைத்தவர் (இ.1937)
- 1867 –மேரி அக்வர்த் எவர்ழ்செடுபாங்கிலேய வானியலாளர் (இ.1949)
- 1879 –இ. எம். பிராஸ்டர், ஆங்கிலேய எக்ழுத்தாளர் (இ.1970)
- 1890 –ரி. பி. ஜாயா, இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி (இ.1960)
- 1891 –சம்பூர்ணாநந்தர், இராசத்தானின் 3வதுஆளுநர் (இ.1969)
- 1892 –மகாதேவ தேசாய், இந்திய செயற்பாட்டாளர் (இ.1942)
- 1894 –சத்தியேந்திர நாத் போசு, இந்திய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ.1974)
- 1914 –நூர் இனாயத் கான், பிரித்தானிய உளவாளி (இ.1944)
- 1919 –ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர் (இ.2010)
- 1925 –வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (இ.2015)
- 1925 –மௌலானா வஹிதூதீன் கான், இந்திய செயற்பாட்டாளர்
- 1932 –அலவி மௌலானா, இலங்கை முசுலிம் அரசியல்வாதி (இ.2016)
- 1935 –ஷகிலா, இந்தித் திரைப்பட நடிகை (இ.2017)
- 1935 –ஓம்பிரகாஷ் சௌதாலா, இந்திய அரசியல்வாதி
- 1940 –பண்ணாமத்துக் கவிராயர், இலங்கை எழுத்தாளர்
- 1942 –அலசான் வட்டாரா, ஐவரி கோஸ்டின் அரசுத்தலைவர்
- 1943 –செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர்
- 1944 –உமர் அல்-பஷீர், சூடானின் 7வது அரசுத்தலைவர்
- 1944 –கல்வயல் வே. குமாரசாமி, ஈழத்துக் கவிஞர், கல்வியாளர் (இ.2016)
- 1951 –நானா படேகர், இந்திய நடிகர்
- 1951 –மார்த்தா பி. கேனசு, அமெரிக்க வானியலாளர்
- 1952 –சேக் அமத் பின் கலீபா அல் தானி, கத்தார் ஆட்சியாளர்
- 1952 –ஷாஜி என். கருண், இந்திய இயக்குநர், ஒளிப்பதிவாளர்
- 1956 –கிறிஸ்டைன் லகார்டே, பிரான்சிய அரசியல்வாதி
- 1957 –நஜீப் அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி
- 1966 –மில்லர், முதல்கரும்புலி (இ.1987)
- 1971 –கலாபவன் மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பாடகர் (இ.2016)
- 1971 –ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா, இந்திய அரசியல்வாதி
- 1975 –சோனாலி பேந்திரே, இந்திய நடிகை
- 1977 –தாமிரா, தமிழகத் திரைப்பட இயக்குநர் (இ.2021)
- 1979 –வித்யா பாலன், இந்திய நடிகை
- 1979 –சுஜாதா கிருஷ்ணன், மலேசியத் தமிழ்த் திரைப்பட நடிகை (இ.2007)
இறப்புகள்
- 1894 –ஐன்ரிக் ஏர்ட்சு, செருமானிய இயற்பியலாளர் (பி.1857)
- 1901 –சி. வை. தாமோதரம்பிள்ளை, ஈழத்து வரலாற்றாளர், பதிப்பாளர் (பி.1832)
- 1910 –வே. அகிலேசபிள்ளை, தமிழறிஞர், ஈழத்துப் புலவர் (பி.1853)
- 1944 –எட்வின் லூட்டியன்சு, ஆங்கிலேய கட்டிடக் கலைஞர்,தியெப்வால் நினைவுச்சின்னத்தை வடிவமைத்தவர் (பி.1869)
- 1945 –வேதநாயகம் சாமுவேல் அசரியா, ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதல் இந்திய ஆயர் (பி.1874)
- 1955 –சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய வேதியியலாளர் (பி.1894)
- 1992 –கிரேசு ஹாப்பர்,கோபோல் நிரலாக்க மொழியை உருவாக்கிய அமெரிக்கர் (பி.1906)
- 2008 –தியாகராஜா மகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி.1960)
- 2010 –பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி.1957)
- 2016 –வில்மோஸ் சிக்மண்ட், அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (பி.1930)
சிறப்பு நாள்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑1.01.11.21.31.4John H. Martyn,Notes on Jaffna, American Ceylon Mission Press,தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)
- ↑"Principal Ceylon Events, 1958". Ferguson's Ceylon Directory, Colombo. 1959.
வெளி இணைப்புகள்