இசுரேல்[a] (Israel,எபிரேயம்:יִשְׂרָאֵל;யிஸ்ராஎல்;அரபி:إِسْرَائِيل,யிஸ்ராஎல், அலுவலக ரீதியாகஇசுரேல் நாடு;[b][மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்),[தவுலத் இஸ்ராஇல்](அரபு)) என்பதுமேற்காசியாவின் தெற்கு லெவண்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு வடக்கேலெபனான், வட கிழக்கேசிரியா, கிழக்கேயோர்தான், தென்மேற்கேஎகிப்து மற்றும் மேற்கேநடுநிலக் கடல் ஆகியவற்றுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. கிழக்கேமேற்குக் கரையின்பாலத்தீன நிலப்பரப்புகளும், தென்மேற்கேகாசாக்கரை மற்றும் வடகிழக்கே சிரியாவின்கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளை இந்நாடு ஆக்கிரமித்துள்ளது. இதன் தெற்கு கோடி முனையில்செங்கடலில் ஒரு சிறிய கடற்கரையை இந்நாடு கொண்டுள்ளது.சாக்கடலின் பகுதி இந்நாட்டின் கிழக்கு எல்லையின் நெடுகில் அமைந்துள்ளது. இந்நாட்டின்அறிவிக்கப்பட்ட தலைநகரம்எருசலேம் ஆகும்.[9] அதே நேரத்தில்,டெல் அவீவ் இந்நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியாகவும், பொருளாதார மையமாகவும் திகழ்கிறது.
இசுரேல் தேசம் என்று அறியப்படும் ஒரு பகுதியில் இசுரேல் அமைவிடத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இப்பகுதிகானான்,திருநாடு, பாலத்தீனப் பகுதி மற்றும்யூதேயா ஆகியவற்றுக்கு ஒப்பானதாக உள்ளது.பண்டைக் காலத்தில் இந்நாடு கானானிய நாகரிகத்துக்குத் தாயகமாக இருந்தது. இதற்குப் பிறகு இசுரேல் மற்றும் யூதேயா இராச்சியங்கள் அமைந்திருந்தன. கண்டங்கள் சந்திக்கும் ஒரு பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியானதுஉரோமானியர்கள் முதல்உதுமானியர்கள் வரையில் பேரரசுகளின் ஆட்சிக்குக் கீழ் மக்கள் தொகை மாற்றங்களைக் கண்டது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய யூத எதிர்ப்பானதுசியோனியத்துக்கு வடிவம் கொடுத்தது. பாலத்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தாயகத்தை நிறுவ இக்கொள்கை விரும்பியது.பால்போர் சாற்றுதலுடன் பிரித்தானியாவின் ஆதரவை இது பெற்றது.முதலாம் உலகப் போருக்குப் பிறகு பிரித்தானியா இப்பகுதியை ஆக்கிரமித்தது. 1920-இல்கட்டளைப் பாலத்தீனத்தை நிறுவியது.பெரும் இன அழிப்பு காரணமாக நடந்த அதிகரித்து வந்தயூத புலப்பெயர்வு மற்றும் மத்திய கிழக்கில் பிரித்தானிய அயல்நாட்டுக் கொள்கை ஆகியவையூதர் மற்றும்அரேபியருக்கு இடையில் பிரச்சனைக்கு வழி வகுத்தது.[10][11]ஐக்கிய நாடுகள் அவையானது இந்த இரு மக்களுக்கு இடையே நிலத்தைப் பிரிப்பதை முன் மொழிந்ததற்குப் பிறகு 1947-இல் இது ஓர் உள்நாட்டுப் போராகத் தீவிரமடைந்தது.
பாலத்தீனத்துக்கான பிரித்தானிய கட்டளைப் பகுதியின் முடிவுக்குப் பிறகு 14 மே 1948 அன்று இசுரேல்சுதந்திரத்தை அறிவித்தது. அடுத்த நாள் அண்டைப் பகுதி அரபு நாடுகள் படையெடுத்தன.முதல் அரபு-இசுரேலிய போர் தொடங்கியது. 1949-இல் போர் நிறுத்த ஒப்பந்தத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரிப்புத் திட்டம் குறிப்பிட்டதை விட அதிக நிலப்பரப்பின் கட்டுப்பாடு இசுரேலிடம் விடப்பட்டது.[12] முந்தைய கட்டளை நிலப்பரப்பின் எஞ்சிய பகுதிகளானவை காசாக் கரை மற்றும் மேற்குக் கரை என முறையேஎகிப்து மற்றும்யோர்தானிடம் இருந்ததால் எந்த ஒரு புதிய சுதந்திரமான அரபு நாடும் உருவாக்கப்படவில்லை.[12][13][14] தற்போது, நக்பா என்று அறியப்படும் நிகழ்வில் பாலத்தீன அரேபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இப்பகுதியிலிருந்து தப்பி ஓடினர் அல்லது வெளியேற்றப்பட்டனர். எஞ்சியவர்கள் புதிய நாட்டின் முதன்மையான சிறுபான்மையினராக உருவாயினர்.[15][16][17] தொடர்ந்த தசாப்தங்களில் அரேபிய உலகத்திலிருந்து புலம் பெயர்ந்தோ, தப்பித்து வந்தோ அல்லது வெளியேற்றப்பட்டோ இருந்த யூதர்களின் திரளான வரவை இந்நாடானது பெற்றதால் இசுரேலின் மக்கள் தொகையானது பெருமளவுக்கு அதிகரித்தது என்று குறிப்பிடப்படுகிறது.[18][19]
1967-ஆம் ஆண்டின்ஆறு நாள் போரைத் தொடர்ந்து இசுரேல் மேற்குக் கரை, காசாக் கரை, எகிப்திய சினாய் தீபகற்பம் மற்றும் சிரிய கோலான் குன்றுகள் ஆகியவற்றை ஆக்கிரமித்தது. 1973-ஆம் ஆண்டின்யோம் கிப்பூர்ப் போருக்குப் பிறகு எகிப்து மற்றும் யோர்தானுடன் இசுரேல் அமைதி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது. 1982-இல் சினாய் தீபகற்பத்தை எகிப்திடம் ஒப்படைத்தது. 1993-இல் இசுரேல் ஆசுலோ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. மேற்குக் கரை மற்றும் காசாவின் பகுதிகளில் பரற்பர அங்கீகரிப்பு மற்றும் வரம்புக்குட்பட்ட பாலத்தீன சுய-நிர்வாகம் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் நிறுவியது. 2020-களில்ஆபிரகாம் ஒப்பந்தங்கள் வழியாக மேற்கொண்ட பல அரபு நாடுகளுடன் இந்நாடு உறவு முறைகளைப் புதுப்பித்தது. எனினும், இடைக்கால ஆசுலோ ஒப்பந்தங்களுக்குப் பிறகுஇசுரேல்-பாலத்தீனப் பிணக்கைத் தீர்க்கும் முயற்சிகளானவை வெற்றியடையவில்லை. இந்நாடு பாலத்தீனக் குழுக்களுடன் பல போர்கள் மற்றும் சண்டைகளில் ஈடுபட்டுள்ளது. பன்னாட்டு சட்டங்களுக்கு முரணாக, சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் இசுரேல் தன்னை நிறுவி, குடியிருப்புகளை விரிவாக்குவதைத் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலும் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்படாத நிகழ்வுகளாக கிழக்கு எருசலேம் மற்றும் கோலான் குன்றுகளை செயல்பாட்டு ரீதியில் இந்நாடு இணைத்துள்ளது. இந்நாடு ஆக்கிரமித்துள்ள பாலத்தீன நிலப்பரப்புகளில் இசுரேலின் செயல்பாடுகளானவை நிபுணர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அவை அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலத்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆகியவற்றுடன் நீடித்த பன்னாட்டு ரீதியிலான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
இந்நாட்டின் அடிப்படைச் சட்டங்களானவைவிகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையால் தேர்தெடுக்கப்படும் ஒருநாடாளுமன்றத்தை நிறுவியுள்ளன. இதுகெனெசெட் என்று அழைக்கப்படுகிறது. பிரதமரால் தலைமை தாங்கப்பட்ட அரசாங்கத்தில் உள்ளவர்களை இது தீர்மானிக்கிறது. பெயரளவு அதிகாரமுடைய அதிபரைத் தேர்ந்தெடுக்கிறது.[20] மத்திய கிழக்கில் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றையும்,[21] ஆசியாவிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களில் ஒன்றையும், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் 26-ஆவதுமிகப் பெரிய பொருளாதாரத்தையும், பெயரளவு தனிமனித மொத்த உள்நாட்டு உற்பத்தியில்16-ஆவது இடத்தையும் இசுரேல் கொண்டுள்ளது.[22][23] உலகளவில் தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய நாடாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் இசுரேல் உள்ளது. உலகில் எந்த ஒரு நாட்டையும் விட தகவுப் பொருத்த அளவில் ஆய்வுக்கும், விருத்திக்கும்அதிகம் செலவழிக்கும் நாடாக இது உள்ளது.[24][25] இந்நாடு அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்பது பரவலாக நம்பப்படும் ஒன்றாகும். இசுரேலியப் பண்பாடானதுயூத மற்றும் வெளிநாடு வாழ் யூதக் காரணிகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் பண்பாடு அரேபியத் தாக்கங்களையும் கொண்டுள்ளது.
பெயர்க் காரணம்
இசுரேலின் நிலம் மற்றும்இசுரேலின் குழந்தைகள் ஆகிய பெயர்கள் வரலாற்று ரீதியாக முறையே விவிலியஇசுரேலிய இராச்சியம் மற்றும் ஒட்டு மொத்தயூத மக்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.இசுரேல் (எபிரேயம்: யிஸ்ரஏல்;செப்துவசிந்தா பண்டைக் கிரேக்கம்: Ἰσραήλ, இஸ்ரேல், "எல் உளதாயிருக்கிறார்/ஆள்கிறார்") என்ற பெயரானது பிதாப்பிதாவானயாக்கோபுவைக் குறிப்பிடுகிறது.எபிரேய வேதாகமத்தின் படி அவர் கடவுளின் தேவதூதனுடன் மல்யுத்தம் செய்து வெற்றி பெற்றதற்குப் பிறகு இப்பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டது.[26] ஒட்டு மொத்தமாகஇஸ்ரேல் என்ற சொல்லைக் குறிப்பிடும் தொடக்க காலத்தில் அறியப்பட்ட தொல்லியல் பொருளானதுபண்டைய எகிப்தின்மெனப்தா கல்வெட்டு ஆகும் (இது பொ. ஊ. மு. 13-ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதிக்குக் காலமிடப்படுகிறது).[27][28][29][fn 1][31]
பிரித்தானிய கட்டளைப் பகுதிக்குக் (1920–1948) கீழ் இந்த ஒட்டு மொத்த பகுதியும்பாலத்தீனம் என்று அறியப்பட்டது.[32]1948-இல் இந்நாடு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து இது அலுவல் பூர்வமாகஇஸ்ரேல் அரசு (எபிரேயம்: מְדִינַת יִשְׂרָאֵל, மெதினாத் யிஸ்ரயேல்;அரபி:دَوْلَة إِسْرَائِيل,தவ்லத் இஸ்ரைல்) என்ற பெயரைப் பின்பற்றத் தொடங்கியது.இசுரேல் தேசம் (எரெட்ஸ் இஸ்ரேல்),எவெர் (எபேர் என்ற முன்னோரிடமிருந்து பெறப்பட்டது),சீயோன் மற்றும்யூதேயா உள்ளிட்ட முன்மொழியப்பட்ட பிற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.[33] ஆனால், அவை நிராகரிக்கப்பட்ட பிறகு இப்பெயர் பின்பற்றப்பட்டது. இசுரேல் என்ற பெயரானதுடேவிட் பென்-குரியனால் பரிந்துரைக்கப்பட்டது. 6-3 என்ற வாக்களிப்பின் அடிப்படையில் பின்பற்றப்பட்டது.[34] நிறுவப்பட்டதற்குப் பிறகு தொடக்க வாரங்களில் இந்த அரசின் ஒரு குடிமகனைக் குறிப்பிடஇஸ்ரேலி என்ற சொல்லை அரசாங்கம் தேர்ந்தெடுத்தது.[35]
தோரா மற்றும்பழைய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள திரளான வெளியேற்றமானது அவற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளதன் படி நடைபெறவில்லை என பெரும்பாலான நவீன அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர். எனினும், இந்தப் பாரம்பரியங்களின் சில ஆக்கக்கூறுகளானவை வரலாற்று வேரூன்றல்களைக் கொண்டிருந்தன. இசுரேல் மற்றும் யூத இராச்சியங்களின் தொடக்க கால இருப்பு, அவற்றின் விரிவு மற்றும் சக்தி குறித்த கருத்துக்கள் விவாதத்திற்குரியவையாக உள்ளன.[51][52]இசுரேலின் ஐக்கிய இராச்சியம் என ஒன்று இருந்ததா என்பது தெளிவாகத் தெரியாத அதே வேளையில்[53][54]அண். பொ. ஊ. மு. 900 வாக்கில் வடக்குஇசுரேல் இராச்சியம்[55]:169–195 மற்றும்அண். பொ. ஊ. மு. 850 வாக்கில்யூத அரசு[56][57] ஆகியவை இருந்தது என வரலாற்றாளர்களும், தொல்லியலாளர்களும் ஒப்புக் கொள்கின்றனர். இந்த இரண்டில் இசுரேல் இராச்சியமானது அதிக செழிப்புடையதாக இருந்தது என குறிப்பிடப்படுகிறது. சீக்கிரமே ஒரு பிராந்திய சக்தியாக இது வளர்ச்சியடைந்தது. இதன் தலைநகரம் சமாரியாவில் அமைந்திருந்தது.[58][59][60] ஒம்ரிய அரசமரபின் ஆட்சிக் காலத்தின் போது இதுசமாரியா,கலிலேயா, மேல் யோர்தான் பள்ளத்தாக்கு, சரோன் சமவெளி மற்றும் தெற்கு யோர்தானின் பெரும் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.[59]
பொ. ஊ. மு. 720 வாக்கில் இசுரேல் இராச்சியமானதுபுது அசிரியப் பேரரசால் வெல்லப்பட்டது.[61]எருசேலத்தில் அதன் தலைநகரைக் கொண்டு தாவீதிய அரசமரபால் ஆளப்பட்ட யூத இராச்சியமானது முதலில் புது அசிரியப் பேரரசின் ஒரு துணை அரசாகவும், பிறகுபுது பாபிலோனியப் பேரரசின் துணை அரசாகவும் உருவானது.இரண்டாம் இரும்புக் காலத்தில்[62] இப்பகுதியின் மக்கள் தொகையானது சுமார் நான்கு இலட்சமாக இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. பொ. ஊ. மு. 587/6-இல் யூதாவில் ஒரு கிளர்ச்சியைத் தொடர்ந்து மன்னர்இரண்டாம் நெபுகாத்னேசர் எருசலேம் மற்றும்சாலமோனின் கோயிலைமுற்றுகையிட்டு அழித்தார்.[63][64] இராச்சியத்தைக் கலைத்தார். யூத மேல் வகுப்பினரில் பெரும்பாலானவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினார்.[65]
செவ்வியல் பண்டைக் காலம்
பொ. ஊ. மு. 539-இல் பாபிலோனைக் கைப்பற்றியதற்குப் பிறகுஅகாமனிசியப் பேரரசைத் தோற்றுவித்தவரானசைரசு வெளியேற்றப்பட்ட யூத மக்கள் மீண்டும் திரும்பி வருவதற்கு அனுமதியளித்த ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டார்.[66][67]அண். பொ. ஊ. மு. 520-இல்இரண்டாம் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.[66] எகுத் மெதினதா மாகாணமாக இப்பகுதியை அகாமனிசியர்கள் ஆட்சி செய்தனர்.[68] பொ. ஊ. மு. 332-இல் அகாமனிசியப் பேரரசுக்கு எதிரான தன்னுடைய படையெடுப்பின் ஒரு பகுதியாக இப்பகுதியைஅலெக்சாந்தர் வென்றார். அவரது இறப்பிற்குப் பிறகு கோயேல்-சிரியாவின் பகுதியாகதாலமி மற்றும்செலூக்கியப் பேரரசுகளால் இப்பகுதியானது கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளின் போக்கில் இப்பகுதி எலனியமயமாக்கப்பட்டது பண்பாட்டுப் பதற்றங்களுக்கு வழி வகுத்தது.நான்காம் அந்தியோச்சுசுவின் ஆட்சிக் காலத்தின் போது இந்த பதற்றங்களானவை உச்ச நிலையை அடைந்து பொ. ஊ. மு. 167-ஆம் ஆண்டின் மக்காபிய கிளர்ச்சிக்கு வழி வகுத்தன. பொது மக்களிடையே அமைதியின்மையானது செலூக்கிய ஆட்சியைப் பலவீனமடையச் செய்தது. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூதேயாவின் பகுதியளவு-சுயாட்சியுடையஅசுமோனிய இராச்சியமானது வளர்ச்சியடைந்தது. இது இறுதியாக முழு சுதந்திரத்தைப் பெற்றது. அண்டைப் பகுதிகளுக்குள் விரிவடைந்தது.[69][70][71]
சாக்கடலைப் பார்த்தவாறு அமைந்திருக்கும்மசாடா கோட்டை. முதலாம்-நூற்றாண்டு உரோமானிய முற்றுகை இங்கு நடத்தப்பட்டது.
பொ. ஊ. மு. 63-ஆம் ஆண்டில்உரோமைக் குடியரசு இப்பகுதி மீது படையெடுத்தது. முதலில் சிரியாவின் கட்டுப்பாட்டைப் பெற்றது. பிறகு அசுமோனிய உள்நாட்டுப் போரில் தலையிட்டது. உரோம ஆதரவு மற்றும்பார்த்திய ஆதரவுப் பிரிவினருக்கு இடையே யூதேயாவில் நடைபெற்ற பிரச்சனைகளானவைஉரோமிடம் அடிபணிந்த ஓர் அரசமரபைச் சேர்ந்தவராகமுதலாம் ஏரோது பதவியில் அமர்த்தப்படுவதற்கு வழி வகுத்தது. பொ. ஊ. மு. 6-ஆம் ஆண்டில்யூதேயா எனும் உரோமை மாகாணமாக இப்பகுதி இணைக்கப்பட்டது. உரோமானிய ஆட்சியுடனான பதற்றங்களானவை ஒரு தொடர்ச்சியானயூத-உரோமைப் போர்களுக்கு வழி வகுத்தன. பரவலான அழிவுக்கு இவை காரணமாயின.முதலாம் யூத-உரோமைப் போரானது (பொ. ஊ. 66 - 73) எருசலேம் மற்றும் இரண்டாம் கோயில்அழிக்கப்படுவதில் முடிவடைந்தது. மக்கள் தொகையில் ஒரு குறிப்பிடத்தக்க அளவினர் கொல்லப்படுவதற்கு அல்லது இடம் பெயருவதற்குக் காரணமானது.[72]
பார் கோக்பா கிளர்ச்சி (பொ. ஊ. 132 – 136) என்று அறியப்படும் இரண்டாவது கிளர்ச்சியானது ஒரு சுதந்திர அரசை அமைக்க யூதர்களுக்கு தொடக்கத்தில் அனுமதியளித்தது. ஆனால், உரோமானியர்கள் இந்த கிளர்ச்சியை மிருகத்தனமாக நொறுக்கினர். யூதேயாவின் கிராமப்புறப் பகுதிகள் அழிவுக்குட்படுத்தப்பட்டு மக்கள் தொகை குறைவுக்கு உள்ளாயின.[72][73][74][75][76] எருசலேமானது ஓர் உரோமானிய குடியேற்றமாக (அயேலியா கேப்பித்தோலினா) மீண்டும் கட்டமைக்கப்பட்டது. யூதேயா மாகாணமானது சிரியா பாலத்தீனா என பெயர் மாற்றப்பட்டது.[77][78] எருசலேமைச் சுற்றியிருந்த மாவட்டங்களிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.[75][79] இருந்த போதிலும் ஒரு தொடர்ச்சியான சிறிய யூத இருப்பானது அப்பகுதியில் இருந்தது. கலிலேயா இதன் சமய மையமாக உருவானது.[80][81]
கான்சுடன்டைன் கிறித்தவ சமயத்தைத் தழுவி ஊக்குவித்தது மற்றும்முதலாம் தியோதோசியசு கிறித்தவத்தை உரோமைப் பேரரசின் சமயமாக ஆக்கியதுடன் பொ. ஊ. நான்காம் நூற்றாண்டில் உரோமானிய பல கடவுள் வழிபாட்டு முறையை தொடக்க காலக் கிறித்தவமானது இடமாற்றம் செய்தது. யூதர்கள் மற்றும் யூத சமயத்திற்கு எதிரான தொடர்ச்சியான சட்டங்கள் இயற்றப்பட்டன. திருச்சபையும், அது சார்ந்த அமைப்புகளும் யூதர்களுக்கு எதிராகச் செயல்பட்டன என குறிப்பிடப்படுகிறது.[82] பல யூதர்கள் செல்வச் செழிப்பிலிருந்த அயல்நாட்டு யூத சமூகங்களுடன் இணைய இப்பகுதியை விட்டு வெளியேறி விட்டனர்.[83] அதே நேரத்தில், உள்நாட்டு அளவில் கிறித்தவர்கள் இப்பகுதிக்குப் புலம் பெயர்ந்ததும், உள்நாட்டு அளவில் கிறித்தவ சமயத்துக்கு மத மாற்றங்களும் இப்பகுதியில் நடைபெற்றன. ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வாக்கில் கிறித்தவர்கள் பெரும்பான்மையினராக இப்பகுதியில் திகழ்ந்தனர்.[84][85] ஐந்தாம் நூற்றாண்டின் முடிவை நோக்கி சமாரிய கிளர்ச்சிகள் வெடித்தன. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இவை தொடர்ந்தன. சமாரிய மக்கள் தொகையில் ஒரு பெரும் குறைவுக்கு இது காரணமானது.[86]சாசானியர் எருசலேமை வென்றதற்குப் (614) பிறகு மற்றும் பொ. ஊ. 614-இல் எராக்கிளியசுக்கு எதிரான சிறிது காலமே நீடித்திருந்த யூத கிளர்ச்சிக்குப் பிறகு 628-இல் இப்பகுதியின் கட்டுப்பாட்டை பைசாந்தியப் பேரரசானது மீண்டும் பெற்றது.[87]
கலிலேயாவில் அமைந்திருந்த மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிபார் பாரம் யூத வாழிபாட்டுத் தளம்[88]
பொ. ஊ. 634-641 இல்ராசிதீன் கலீபகம் லெவண்டை வென்றது.[83][89][90]எருசலேமுக்குள் யூதர்கள் நுழைவதற்கு கிறித்தவர்கள் விதித்திருந்த தடையை கலீபாஉமறு (ஆ. 634–644) நீக்கினார். யூதர்களை அங்கே வழிபட அனுமதித்தார்.[91] அடுத்த ஆறு நூற்றாண்டுகளில் இப்பகுதியின் கட்டுப்பாடானதுஉமய்யா,அப்பாசிய, மற்றும்பாத்திமிய கலீபகங்களுக்கு இடையில் கை மாற்றப்பட்டது. இறுதியாகசெல்யூக் மற்றும்அயூப்பிய அரசமரபுகள் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன.[92] தொடர்ந்து வந்த பல நூற்றாண்டுகளின் போது இப்பகுதியின் மக்கள் தொகையானது பெருமளவு குறைந்தது. உரோமானிய மற்றும் பைசாந்திய காலங்களின் போது 10 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டிருந்த அளவிலிருந்து தொடக்க காலஉதுமானிய காலம் வாக்கில் சுமார் மூன்று இலட்சமாகக் குறைந்தது. இப்பகுதியில் சீராக அரேபியமயமாக்கம் மற்றும் இசுலாமியமயமாக்கம் நடைபெற்றது.[93][62][89][90][94] 11-ஆம் நூற்றாண்டின் முடிவானதுசிலுவைப் போர்களை கொண்டு வந்தது. முசுலிம் கட்டுப்பாட்டிலிருந்து எருசலேமையும்,திருநாட்டையும் பறித்து சிலுவைப் போர் அரசுகளை நிறுவும் எண்ணங்களைக் கொண்டிருந்த,திருத்தந்தையால் அனுமதிக்கப்பட்ட கிறித்தவ சிலுவைப் போர் வீரர்களின் ஊடுருவல்கள் இவையாகும்.[95] 1291-இல்எகிப்தின் மம்லூக் சுல்தான்களால் முசுலிம் ஆட்சி முழுவதுமாக மீண்டும் அமைக்கப்படுவதற்கு முன்னர் அயூப்பியர்கள் சிலுவைப் போர் வீரர்களை வெளியேற்றினர்.[96]
1516-இல் உதுமானியப் பேரரசு இப்பகுதியை வென்றது. உதுமானிய சிரியாவின் ஒரு பகுதியாக இதை ஆண்டது.[97][93] உதுமானிய-மம்லூக் போரின் போதுமம்லூக்குகளை துருக்கிய உதுமானியர்கள் வெளியேற்றியதற்குப் பிறகு இரு வன்முறையான நிகழ்வுகளான சேப்பாத் தாக்குதல்களும் (1517), எபிரோன் தாக்குதல்களும் (1517) யூதர்களுக்கு எதிராக நடைபெற்றன.[98][99] உதுமானியப் பேரரசின் கீழ் கிறித்தவர்கள், முசுலிம்கள் மற்றும் யூதர்கள் ஆகியோருக்கு சமய சுதந்திரம் வழங்கப்பட்டதுடன் லெவண்ட் பகுதியானது பெரும்பாலும் பல இன, பண்பாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது.எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணையிலிருந்து தப்பியசெபராது யூதர்களை 1561-இல் உதுமானிய சுல்தான்முதலாம் சுலைமான் குடியமருமாறும்,திபேரியு நகரத்தை மீண்டும் கட்டமைக்குமாறும் அழைத்தார்.[100][101]
உதுமானியப் பேரரசின் மில்லத்து அமைப்பு எனும் சுதந்திரமான நீதித்துறை அமைப்பின் கீழ் கிறித்தவர்களும், யூதர்களும் உதுமானிய சட்டத்தின் கீழ்திம்மி ("பாதுகாக்கப்பட்டவர்") என்று கருதப்பட்டனர். இதற்கு கைமாறாக அவர்கள் அரசுக்கு விசுவாசமாகவும்,ஜிஸ்யா வரியை செலுத்தியும் வந்தனர்.[102][103] இந்த கட்டுப்பாடுகள் அனைத்து நேரத்திலும் அமல்படுத்தப்படாவிட்டாலும் முசுலிம் அல்லாத உதுமானிய மக்கள் புவியியல் மற்றும் வாழ்க்கை முறை கட்டுப்பாடுகளை எதிர் கொண்டனர்.[104][105][106] மில்லத்து அமைப்பானது சமயத்தை அடிப்படையாகக் கொண்டு முசுலிம் அல்லாதவர்களை சுயாட்சியுடைய சமூகங்களாக ஒருங்கமைத்தது.[107]
சுவிச்சர்லாந்தின்பேசல் நகரத்தில் நடைபெறும் முதலாம் சியோனியப் பேரவை (1897)
இப்பகுதிக்கு யூதர்கள் "திரும்பி வருவது" என்ற கருத்துருவானது சமயம் சார்ந்த யூத நம்பிக்கைக்குள் ஓர் அடையாளமாக தொடர்ந்தது. மனிதச் செயல்பாட்டால் இல்லாது கடவுளின் செயலால் தங்களது வருகை முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதை இந்த நம்பிக்கையானது கவனக் குவியமாகக் கொண்டிருந்தது.[108] முன்னணி சியோனிய வரலாற்றாளரான சுலோமோ அவினேரி இந்தத் தொடர்பை பின்வருமாறு விளக்குகிறார்: "கிறித்துவின் இரண்டாம் வருகையைப் பெரும்பாலான கிறித்தவர்கள் பார்ப்பதைக் காட்டிலும் தாங்கள் திரும்பி வரும் கருத்துருவை யூதர்கள் அதிக செயல்பாட்டு வழியில் தொடர்புபடுத்துவது இல்லை." ஒரு தேசமாக இருப்பது குறித்த சமயம் சார்ந்த யூத எண்ணமானது தேசியவாதம் குறித்த நவீன ஐரோப்பிய எண்ணத்திலிருந்து தனித்து வேறுபட்டுள்ளது.[109] உதுமானிய ஆட்சியிலிருந்து சியோனிய இயக்கத்தின் தொடக்கம் வரை பாலத்தீனத்தின் யூத மக்கள் சிறுபான்மையினராகவும், எண்ணிக்கையில் மாறக் கூடியவர்களாகவும் இருந்தனர். இவர்கள் பழைய இசுவ் என்று அறியப்படுகின்றனர். 16-ஆம் நூற்றாண்டின் போது எருசலேம்,திபேரியு,எபிரோன் மற்றும்சேப்பாத் ஆகியநான்கு புனித நகரங்களில் யூத சமூகங்கள் வேரூன்றத் தொடங்கின. 1697-இல் ராபியான எகுதா அச்சசிது 1,500 யூதர்களை எருசலேமுக்கு அழைத்துச் சென்றார்.[110] உதுமானியர்களுக்கு எதிரான 1660-ஆம் ஆண்டு துருசு கிளர்ச்சியானது சேப்பாத் மற்றும் திபேரியு ஆகிய நகரங்களை அழித்தது.[97] 18-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில்அசிதியம் யூத எதிர்ப்பாளர்களாக இருந்த பெருசிம் என்று அறியப்பட்ட கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் பாலத்தீனத்தில் குடியமர்ந்தனர்.[111][112]
18-ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் உள்ளூர் அரேபிய சேக்கான சாகீர் அல்-உமறு கலிலேயாவில் நடைமுறை ரீதியில் சுதந்திரமான ஓர் அமீரகத்தை உருவாக்கினார். சேக்கை அடிபணிய வைக்கும் உதுமானிய முயற்சிகளானவை தோல்வியடைந்தன. அவரது இறப்பிற்குப் பிறகு உதுமானியர்கள் இப்பகுதியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றனர். 1799-இல் அக்ரே நகரம் மீதானநெப்போலியனின் துருப்புக்களின் தாக்குதலை ஆளுநரான சச்சார் பாசா முறியடித்தார். இது பிரெஞ்சுக்காரர்கள் தங்களது சிரியப் படையெடுப்பை கைவிடுவதற்குக் காரணமானது.[113] 1834-இல்முகம்மது அலிக்குக் கீழான எகிப்திய இராணுவத்தில் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிகழ்வு மற்றும் வரி வசூலிக்கும் கொள்கைகளுக்கு எதிராக பாலத்தீனிய அரேபிய விவசாயிகள் ஒரு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், இது ஒடுக்கப்பட்டது. முகம்மது அலியின் இராணுவமானது பின்வாங்கியது. 1840-இல் பிரித்தானிய ஆதரவுடன் உதுமானிய ஆட்சியானது மீண்டும் இப்பகுதியில் நிறுவப்பட்டது.[114]டான்சிமாத் சீர்திருத்தங்களானவை உதுமானியப் பேரரசு முழுவதும் செயல்படுத்தப்பட்டன.
உதுமானிய ஆட்சிக்குட்பட்டிருந்த பாலத்தீனத்திற்குள் முதல் அலியா என்று அறியப்படும் நவீன யூத புலப்பெயர்வின் முதல் அலையானது 1881-ஆம் ஆண்டு தொடங்கியது. ஏனெனில், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அமைப்பு ரீதியிலான கொலைகளிலிருந்து யூதர்கள் தப்பித்து வந்தனர்.[115] 1882-ஆம் ஆண்டின் மே சட்டங்களானவை யூதர்களுக்கு எதிரான பொருளாதார பாரபட்சங்களை அதிகரித்தன. அவர்கள் எங்கு வசிக்கலாம் என்பதை கட்டுப்படுத்தின.[116][117] இதற்கு பதிலாக அரசியல்சியோனியமானது அதன் வடிவத்தைப் பெற்றது என்று குறிப்பிடப்படுகிறது. பாலத்தீனத்தில் ஒரு யூத அரசை நிறுவும் கருத்தைக் கொண்டிருந்த ஓர் இயக்கம் இதுவாகும். ஐரோப்பிய அரசுகளின் யூத கேள்விக்கு ஒரு தீர்வை இது இவ்வாறு அளித்தது என்று குறிப்பிடப்படுகிறது.[118][மேம்பட்ட ஆதாரம் தேவைப்படுகிறது] யூத வெறுப்பு, அமைப்பு ரீதியிலான படுகொலைகள் மற்றும் ஜார் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த உருசியாவின் அதிகாரப்பூர்வ கொள்கைகள் ஆகியவை 1882 மற்றும் 1914 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 30 இலட்சம் யூதர்கள் புலம் பெயர்வதற்குக் காரணமாயின. இதில் 1% பாலத்தீனத்திற்குச் சென்றனர். இவ்வாறு பாலத்தீனத்திற்குச் சென்றவர்களும் அமைப்பு ரீதியிலான படுகொலைகள் அல்லது பொருளாதார பாதுகாப்பற்ற நிலை காரணமாகச் செல்லாமல் சுய-முறைமை மற்றும் யூத அடையாளம் ஆகிய யோசனைகளால் முதன்மையாக பாலத்தீனத்திற்குச் சென்றனர்.[108]
கிசினேவ் படுகொலைகளுக்குப் பிறகு இரண்டாம் அலியா தொடங்கியது. சுமார் 40,000 யூதர்கள் பாலத்தீனத்தில் குடியமர்ந்தனர். எனினும், இதில் கிட்டத்தட்ட பாதிப் பேர் இறுதியாக பாலத்தீனத்திலிருந்து வெளியேறினர். முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் வந்தவர்கள் பெரும்பாலும்மரபுவழி யூதர்களாக இருந்தனர்.[119] இரண்டாவது அலியாவானது சியோனிய சமதர்மக் குழுக்களை உள்ளடக்கியிருந்தது. இவர்கள்கிப்புட்ஸ் இயக்கத்தை நிறுவினர். முழுமையாக யூத பணியாளர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனியான யூத பொருளாதாரத்தை நிறுவும் யோசனையை அடிப்படையாகக் கொண்ட ஓர் இயக்கம் இதுவாகும்.[120][121] பின் வந்த தசாப்தங்களில் இசுவின் தலைவர்களாக உருவாகிய இரண்டாவது அலியாவைச் சேர்ந்தவர்கள் யூதக் குடியேற்றவாதிகளின் பொருளாதாரமானது அரேபியப் பணியாளர்களைச் சார்ந்திருக்கக் கூடாது என்று நம்பினர். அரேபிய மக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓர் ஆதிக்கம் மிகுந்த ஆதாரமாக இந்நம்பிக்கை திகழ்ந்தது. புதிய இசுவ் தேசியவாத சித்தாந்தமானது அதன் சமதர்ம சித்தாந்தத்தைப் பின்னுக்குத் தள்ளியது.[122] இரண்டாவது அலியாவில் புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் சமூக யூத வேளாண்மைக் குடியிருப்புகளை உருவாக்க விரும்பினாலும், 1909-இல்டெல் அவீவானது முதல் திட்டமிடப்பட்ட யூத பட்டணமாக நிறுவப்பட்டது. இக்காலத்தின் போது இராணுவம் சாராத ஆயுதமேந்திய யூதர்கள் தோன்றினர். 1907-இல் தோன்றிய பர்-கியோரா இதில் முதலாவதாகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இதை இடம் மாற்றியதாக இதை விட பெரிய அசோமர் அமைப்பானது நிறுவப்பட்டது.
சியோனிய இயக்கத்திற்கான பிரித்தானிய ஆதரவைப் பெறும் சைம் வெயிசுமனின் முயற்சிகளானவை இறுதியாக 1917-ஆம் ஆண்டின்பால்போர் சாற்றுதலை உறுதி செய்தன.[123] பாலத்தீனத்தில் ஒரு யூத "தேச தாயகத்தை" உருவாக்குவதற்கு பிரித்தானியாவின் ஆதரவை இது குறிப்பிட்டது.[124][125] அந்நாட்டின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகளானவை அரேபியர்களைத் தவிர்த்து, பிரித்தானியா மற்றும் யூதர்களுக்கு இடையில் நேரடியாக நடைபெற வேண்டும் என இந்த அறிவிப்பை வெயிசுமன் விளக்கினார். பாலத்தீனத்தில் யூத-அரேபிய உறவுமுறைகள் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பெருமளவுக்கு மோசமடைந்தன.[126]
"புனித நிலத்துக்காக கடுமையான போராட்டத்தில் யூதர்களும், அரேபியர்களும்" எனும் தலைப்பிடப்பட்ட 1938-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு செய்தித்தாள் கட்டுரை
1918-இல் முதன்மையாக சியோனிய தன்னார்வலர்களைக் கொண்டிருந்த யூத படைப் பிரிவினர் பாலத்தீனத்தை பிரித்தானிய வெல்வதற்கு உதவி புரிந்தனர்.[127] 1920-இல் கட்டளைப் பகுதி அமைப்பின் கீழ் பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு இடையில் இந்த நிலப்பரப்பானது பிரிக்கப்பட்டது. பிரித்தானியாவால் நிர்வகிக்கப்பட்ட பகுதியானது (நவீன இசுரேல் உட்பட)கட்டளைப் பாலத்தீனம் என்று பெயரிடப்பட்டது.[96][128][129] பிரித்தானிய ஆட்சி மற்றும் யூத புலப்பெயர்வுக்கு எதிரான அரேபிய எதிர்ப்பானது 1920-ஆம் ஆண்டின் பாலத்தீன ஆர்ப்பாட்டங்களுக்குக் காரணமாயின. அசோமரிலிருந்து தோன்றியதானஅகானா என்று அறியப்பட்ட இராணுவம் சாராத ஆயுதமேந்திய ஒரு யூத அமைப்பு உருவாக்கப்பட்டது. இதிலிருந்து இர்குன் மற்றும் லெகி எனப்படும் துணை இராணுவத்தினர் பின்னர் பிரிந்தனர்.[130] 1922-இல்உலக நாடுகள் சங்கமானது பிரித்தானியாவுக்கு கட்டளைப் பாலத்தீனத்தை சில நிபந்தனைகளுக்குக் கீழ் அளித்தது. யூதர்களுக்கு இந்நிலத்தை உறுதியளித்த பால்போர் சாற்றுதல் மற்றும் அரேபிய பாலத்தீனர்கள் குறித்த இதே போன்ற நிபந்தனைகளை இது உள்ளடக்கியிருந்தது.[131] இப்பகுதியின் மக்கள் பெரும்பாலும் அரேபியராகவும், முசுலிம்களாகவும் இருந்தனர். யூதர்கள் சுமார் 11% ஆகவும்,[132] அரேபிய கிறித்தவர்கள் மக்கள் தொகையில் சுமார் 9.5% ஆகவும் இருந்தனர்.[133]
மூன்றாவது (1919–1923) மற்றும் நான்காவது அலியாக்களில் (1924–1929) மேற்கொண்டு 1 இலட்சம் யூதர்கள் பாலத்தீனத்திற்கு வந்தனர். நாசிக் கொள்கையின் வளர்ச்சி மற்றும் 1930-களில் ஐரோப்பாவில் யூதர்கள் அதிகரித்து வந்த நிலையாக இடர்ப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது ஆகியவை ஐந்தாவது அலியாவுக்குக் காரணமாயின. ஐந்தாவது அலியாவில் 2.50 இலட்சம் யூதர்கள் திரளாக வந்தனர். 1936-39 ஆம் ஆண்டின் அரேபியக் கிளர்ச்சிக்கான ஒரு முதன்மையான காரணம் இதுவாகும். இந்த கிளர்ச்சியானது பிரித்தானிய பாதுகாப்பு படையினர் மற்றும் சியோனியப் படையினரால் ஒடுக்கப்பட்டது. பல 100 பிரித்தானிய பாதுகாப்பு படையினரும், யூதர்களும் கொல்லப்பட்டனர்; 5,032 அரேபியர்கள் கொல்லப்பட்டனர், 14,760 பேர் காயமடைந்தனர், மற்றும் 12,622 பேர் கைது செய்யப்பட்டனர்.[134][135][136] வயது வந்த பாலத்தீன அரேபிய ஆண்களில் 10% கொல்லப்பட்டனர், காயமடைந்தனர், கைது செய்யப்பட்டனர் அல்லது நாடு கடத்தப்பட்டனர் என மதிப்பிடப்பட்டது.[137]
1939-ஆம் ஆண்டின் வெள்ளை அறிக்கையுடன் பாலத்தீனத்திற்குள்ளான யூத புலப்பெயர்வுக்கு பிரித்தானியர் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தினர்.பெரும் இன அழிப்பிலிருந்து தப்பித்த யூத அகதிகளை உலகம் முழுவதும் இருந்த நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பாலத்தீனத்திற்கு யூதர்களைக் கொண்டு வர அலியா பேது என்று அறியப்பட்ட ஓர் ஒளிவு மறைவான இயக்கமானது அமைக்கப்பட்டது.இரண்டாம் உலகப் போரின் முடிவு வாக்கில் பாலத்தீனத்திலிருந்த மக்கள் தொகையில் 31% பேர் யூதர்களாக இருந்தனர்.[138] புலப் பெயர்வு மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஒரு யூத கிளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு அளவுகள் காரணமாக அரேபிய சமூகத்துடன் தொடர்ந்து வந்த பிரச்சனை ஆகியவற்றை ஐக்கிய ராச்சியம் எதிர் கொண்டது. பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஓர் ஆயுதமேந்திய சண்டையில் இர்குன் மற்றும் லெகி பிரிவினருடன் அகானா இணைந்தது.[139] தசம ஆயிரக்கணக்கான யூத அகதிகள் மற்றும் பெரும் இன அழிப்பில் தப்பித்தவர்களைப் பாலத்தீனத்திற்குக் கப்பல் மூலம் கொண்டு வர அகானா முயற்சித்தது. இந்த கப்பல்களில் பெரும்பாலானவைஅரச கடற்படையால் தடுக்கப்பட்டன. யூத அகதிகள் அதிலித்து மற்றும் சைப்பிரசு ஆகிய பகுதிகளில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர்.[140][141]
"பொருளாதார ஒன்றியத்துடன் கூடிய பாலத்தீன பிரிவினைத் திட்டம்" எனும் ஐக்கிய நாடுகள் அவையின் வரைபடம்
22 சூலை 1946 அன்று பாலத்தீனத்திற்கான பிரித்தானிய நிர்வாகத் தலைமையகத்தில் யூத இர்குன் பிரிவினர் வெடிகுண்டு வைத்தனர். இதில் 91 பேர் கொல்லப்பட்டனர்.[142][143][144][145] இந்தத் தாக்குதலானது அகதா நடவடிக்கைக்கு (பிரித்தானியரால் ஒரு யூத முகமை மீது நடத்தப்பட்ட ஓர் ஊடுருவல் உள்ளிட்ட ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைகள்) எதிராக நடத்தப்பட்டது. கட்டளைப் பகுதி சகாப்தத்தின் போது பிரித்தானியர் மீது நடத்தப்பட்ட அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய தாக்குதல் இதுவாகும்.[144][145] பிரித்தானிய இராணுவ மற்றும் பாலத்தீன காவல்துறையால் ஓர் ஒருங்கிணைந்த முயற்சியாக ஒடுக்குவதற்கு முயற்சித்தாலும், 1946 மற்றும் 1947 முழுவதும் தொடர்ந்த யூத கிளர்ச்சி இதுவாகும். ஒரு யூத அரசைக் கொண்டிராத எந்த ஒரு தீர்வையும் ஏற்றுக் கொள்ள யூதர்கள் மறுத்ததன் காரணமாக யூத மற்றும் அரேபியப் பிரதிநிதிகளுக்கிடையில் சமரசம் செய்து வைக்க எடுக்கப்பட்ட பிரித்தானிய முயற்சிகளானவை தோல்வியடைந்தன. பாலத்தீனத்தை யூத மற்றும் அரேபிய நாடுகளாகப் பிரிப்பதை யூதர்கள் பரிந்துரைத்தனர். அதே வேளையில், அரேபியர்கள் பாலத்தீனத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஒரு யூத நாட்டை அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டனர். ஒரே தீர்வானது அரேபிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைந்த பாலத்தீனமே என்றனர். பெப்பிரவரி 1947-இல் புதிதாக அமைக்கப்பட்டஐக்கிய நாடுகள் அவையில் பிரித்தானியர் பாலத்தீனப் பிரச்சனையைக் குறிப்பிட்டனர். 15 மே 1947 அன்றுஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது "பாலத்தீனக் கேள்வி குறித்த ஓர் அறிக்கையைத் தயார் செய்து ... சமர்ப்பிக்க" ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் என தீர்மானித்தது.[146] இக்குழுவின் அறிக்கையானது[147] "ஒரு சுதந்திரமான அரேபிய நாடு, ஒரு சுதந்திரமான யூத நாடு, மற்றும் எருசலேம் நகரம்" ஆகியவை பிரித்தானிய கட்டளைப் பகுதியை இடமாற்றம் செய்யும் என்ற ஒரு திட்டத்தை முன் மொழிந்தன. இதில் "கடைசி பகுதியான எருசலேம் நகரமானது பன்னாட்டுப் பொறுப்பாளர் அமைப்பின் கீழ் இருக்கும்" என்று முடிவெடுக்கப்பட்டது.[148] இதே வேளையில், யூத கிளர்ச்சியானது தொடர்ந்தது. சூலை 1947-இல் உச்சநிலையை அடைந்தது. கீழ்நிலை அதிகாரிகள் விவகாரத்தில் உச்ச நிலையை அடைந்த ஒரு தொடர்ச்சியான, பரவலான கரந்தடி ஊடுருவல்கள் நடைபெற்றன. இந்த விவகாரத்தில் இர்குன் யூத இராணுவப் பிரிவினர் இரு பிரித்தானிய இராணுவ கீழ்நிலை அதிகாரிகளை கைதிகளாகப் பிடித்தனர். மூன்று இர்குன் செயல்பாட்டாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் திட்டத்திற்கு எதிராக இந்த அகதிகளைப் பயன்படுத்த முயற்சித்தனர். மரண தண்டனைகள் செயல்படுத்தப்பட்டதற்குப் பிறகு இரு பிரித்தானிய இராணுவ அதிகாரிகளையும் கொன்றனர். அவர்களது உடல்களை மரத்தில் தொங்கவிட்டனர். அந்த இடத்தில் தொடுவெடிப் பொறியமைப்பை அமைத்தனர். இந்த பொறிகளால் ஒரு பிரித்தானிய இராணுவ வீரர் காயமடைந்தார். இந்த நிகழ்வானது ஐக்கிய இராச்சியத்தில் பரவலான கண்டனத்திற்குக் காரணமானது.[149] செப்டம்பர் 1947-இல் கட்டளைப் பகுதியை இதற்கு மேல் பாதுகாக்க இயலாது எனக் கூறிய பிரித்தானிய அமைச்சரவையானது இப்பகுதியிலிருந்து வெளியேற முடிவெடுத்தது.[150]
29 நவம்பர் 1947 அன்று பொதுச் சபையானது தீர்மானம் 181 (2)-ஐ இயற்றியது.[151] இந்தத் தீர்மானத்துடன் இணைக்கப்பட்ட திட்டமானது 3 செப்டம்பர் அறிக்கையில் முன்மொழியப்பட்டதாக இருந்தது. யூத சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியான யூத முகமையானது இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது. பாலத்தீனக் கட்டளைப் பகுதியில் 55 - 56% நிலப்பரப்பானது யூதர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. அந்நேரத்தில் யூதர்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினராக இருந்தனர். ஒட்டு மொத்த நிலத்தில் சுமார் 6 - 7%-ஐ உடைமையாகக் கொண்டிருந்தனர். அரேபியர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். ஒட்டு மொத்த நிலத்தில் சுமார் 20%-ஐ உடைமையாகக் கொண்டிருந்தனர். எஞ்சிய நிலப்பரப்புகளானவை கட்டளைப் பகுதி அதிகார அமைப்புகள் அல்லது அயல்நாட்டு நில உரிமையாளர்களால் உடைமையாகக் கொள்ளப்பட்டிருந்தன.[152][153][154] பாலத்தீனிய விருப்பங்களைத் தவிர்த்து ஐரோப்பிய விருப்பங்களுக்கு இந்தப் பிரிவினைத் திட்டம் ஆதரவளிக்கிறது என்றதன் அடிப்படையில்அரபு நாடுகள் கூட்டமைப்பு மற்றும் பாலத்தீனத்தின் அரேபிய உயர்நிலைக் குழு ஆகியவை இத்திட்டத்தை நிராகரித்தன.[155] எந்த பிற பிரிவினைத் திட்டத்தையும் நிராகரிப்போம் என்பதை வெளிக் காட்டின.[156][157] 1 திசம்பர் 1947 அன்று அரேபிய உயர்நிலைக் குழுவானது ஒரு 3 நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்ததுல். எருசலேமில் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.[158] இச்சூழ்நிலையானது ஒரு உள்நாட்டுப் போராக மாறியது. பிரித்தானிய குடியேற்ற செயலரான ஆர்தர் கிரீச் சோன்சு பிரித்தானிய கட்டளைப் பகுதியானது 15 மே 1948 அன்று முடிவடையும் என்று அறிவித்தார். அந்நாளில் பிரித்தானியர் வெளியேறுவர் என்று குறிப்பிட்டார். இராணுவம் சாராத அரேபிய ஆயுதமேந்திய பிரிவினரும், குழுக்களும் யூதப் பகுதிகளைத் தாக்கத் தொடங்கிய போது அவர்கள் முதன்மையாக அகானா, மேலும் சிறிய பிரிவினரான இர்குன் மற்றும் லெகி ஆகியோரை எதிர் கொண்டனர். ஏப்பிரல் 1948-இல் அகானா தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.[159][160]
14 மே 1948 அன்று பிரித்தானிய கட்டளைப் பகுதி முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னர் யூத முகமையின் தலைவரானதாவீது பென் குரியன் "எரத்சு-இசுரேலில் ஒரு யூத அரசு நிறுவப்படுவதை" அறிவித்தார்.[161] அடுத்த நாள் எகிப்து, சிரியா, தெற்கு யோர்தான் மற்றும் ஈராக் ஆகிய நான்கு அரபு நாடுகளின் இராணுவங்கள் முன்னர் பாலத்தீன கட்டளை பகுதியாக இருந்த பகுதிக்குள் நுழைந்தன. 1948-ஆம் ஆண்டின்அரபு-இசுரேல் போரைத் தொடங்கின.[162] ஏமன்,மொரோக்கோ,சவூதி அரேபியா, மற்றும்சூடானைச் சேர்ந்த படைப் பிரிவுகள் இப்போரில் இணைந்தன.[163][164] இந்தப் படையெடுப்பின் நோக்கமானது யூத அரசு நிறுவப்படுவதைத் தடுப்பதாகும் என குறிப்பிடப்படுகிறது.[153][165][166] அரபு நாடுகள் கூட்டமைப்பானது ஒழுங்கை மீண்டும் நிறுவுவது மற்றும் மேற்கொண்ட ரத்தம் சிந்துவதைத் தடுப்பது ஆகியவற்றுக்காக இப்படையெடுப்பு நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டது.[167]
ஓர் ஆண்டு சண்டைக்குப் பிறகு போர் நிறுத்தமானது அறிவிக்கப்பட்டது. பச்சைக் கோடு என்று அறியப்படும் தற்காலிக எல்லைகளானவை நிறுவப்பட்டன.[168] பிற்காலத்தில்மேற்குக் கரை என்று அறியப்பட்ட,கிழக்கு எருசலேம் உள்ளிட்ட பகுதிகளை யோர்தான் இணைத்துக் கொண்டது.காசாக் கரையை எகிப்து ஆக்கிரமித்தது. 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் தப்பித்து ஓடினர் அல்லது இராணுவம் சாராத ஆயுதமேந்திய சியோனியப் பிரிவினர் மற்றும்இசுரேலிய இராணுவத்தால் வெளியேற்றப்பட்டனர். அரேபிய மொழியில் இது நக்பா ('கொடும் நேர்வு') என்று அறியப்படுகிறது.[169] இந்த நிகழ்வுகளானவை பாலத்தீனத்தின் பெரும்பான்மையான அரேபியப் பண்பாடு, அடையாளம் மட்டும் தேசிய விருப்பங்களின் அழிவுக்குக் காரணமாயின. சுமார் 1,56,000 அரேபியர்கள் இப்பகுதியிலேயே தொடர்ந்து தங்கினர். இசுரேலின் அரேபியக் குடிமக்களாக உருவாயினர்.[170]
10 மார்ச் 1949 அன்று மை கொடி ஏற்றப்படுதல். 1948-ஆம் ஆண்டின்போரின் முடிவை இது குறிக்கிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் 273-இன் படி 11 மே 1949 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் உறுப்பினராக இசுரேலுக்கு இடம் அளிக்கப்பட்டது.[171] இந்த அரசின் தொடக்க ஆண்டுகளில் பிரதமர் பென் குரியனால் தலைமை தாங்கப்பட்ட தொழிலாளர் சியோனிய இயக்கமானது இசுரேலிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது.[172][173] 1940-களின் பிற்பகுதி மற்றும் 1950-களின் தொடக்கப் பகுதியின் போது இசுரேலுக்குள்ளான மக்கள் குடியேற்றத்திற்கு இசுரேலிய புலப்பெயர்வு துறையானது ஆதரவளித்தது. அரசு உதவி பெறாத மொசாத் லே அலியா பேதுவானது (பொருள்: "புலப்பெயர்வு பி-க்கான நிறுவன அமைப்பு") ஆதரவளித்தது.[174] இதில் பின்னர் குறிப்பிடப்பட்ட அமைப்பானது பிற நாடுகளில் ஒளிவு மறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இவ்வாறு ஈடுபட்டது. இப்பகுதிகளில் யூதர்களின் வாழ்வானது ஆபத்திலிருந்தது. அங்கிருந்து வெளியேறுவது கடினமானதாக இருந்தது. மொசாத் லே அலியா பேதுவானது 1953-இல் கலைக்கப்பட்டது.[175] புலப்பெயர்வானது "10 இலட்சம் திட்டம்" என்பதை ஒத்தவாறு நடைபெற்றது. சில குடியேற்றவாதிகள் சியோனிய நம்பிக்கைகளைக் கொண்டவர்களாகவோ அல்லது மேம்பட்ட வாழ்க்கைக்கான உறுதியை நாடியோ வந்தனர். அதே வேளையில், பிறர் இடர்ப்பாடுகளிலிருந்து தப்பிப்பதற்காக வந்தனர் அல்லது அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதால் இந்நாட்டுக்கு வந்தனர்.[176][177]
பெரும் இன அழிப்பிலிருந்து தப்பித்தவர்கள் மற்றும், அரேபிய மற்றும் முசுலிம் நாடுகளிலிருந்து யூதர்கள் ஆகியோர் இசுரேலுக்கு முதல் மூன்று ஆண்டுகளின் போது திரளாக வந்தனர். இது யூதர்களின் எண்ணிக்கையை ஏழு லட்சத்திலிருந்து 14 லட்சமாக உயர்த்தியது. 1958 வாக்கில் மக்கள் தொகையானது 20 லட்சமாக உயர்ந்திருந்தது.[178] 1948 மற்றும்1970-க்கு இடையில் தோராயமாக 11.50 லட்சம் யூத அகதிகள் இசுரேலுக்கு இடமாற்றப்பட்டனர்.[179] சில குடியேற்றவாதிகள் அகதிகளாக வந்தனர்.மாபரோத்து என்று அறியப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 1952 வாக்கில் இந்த கூடார நகரங்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர்.[180]ஐரோப்பியப் பின்புலத்தைக் கொண்டிருந்த யூதர்களானவர்கள்மத்திய கிழக்கு மற்றும்வடக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்த யூதர்களை விட பொதுவாகவே நல்ல முறையில் நடத்தப்பட்டனர். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த வீடுகளானவை முதலாவதாகக் குறிப்பிடப்பட்டவர்களுக்கு என பிறகு ஒதுக்கப்பட்டன. இவ்வாறாக அரேபிய நிலங்களிலிருந்து புதிதாக வந்த யூதர்கள் பொதுவாக இட மாற்ற முகாம்களில் நீண்ட காலம் தங்கியிருக்கும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர்.[181][182] இந்த காலத்தின் போது உணவு, உடை மற்றும் வீட்டு வசதிப் பொருட்களானவை இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. இக்காலமானது சிக்கனமான காலம் என்று அறியப்படுகிறது. இப்பிரச்சனை தீர்க்க வேண்டிய தேவையானது பென் குரியன் மேற்கு செருமனியுடன் பெரும் இன அழிப்புக்கான இழப்பீட்டுத் தொகை ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்குக் காரணமானது. பெரும் இன அழிப்புக்காக இழப்பீட்டுப் பணத்தை இசுரேல் ஏற்கும் என்ற யோசனையானது கோபம் கொண்ட யூதர்களால் பெருமளவு போராட்டங்கள் நடத்தப்படுவதற்குக் காரணமானது.[183]
1950-களின் போது பாலத்தீனிய பெதாயீன்களால் இசுரேல் அடிக்கடி தாக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட பெரும்பாலும் குடிமக்களுக்கு எதிரான தாக்குதலாக இருந்தது.[184] இத்தாக்குதலை நடத்தியவர்கள் எகிப்தின் ஆக்கிரமிப்பிலிருந்த காசாக் கரையிலிருந்து முதன்மையாக வந்தனர்.[185] பல இசுரேலிய பதில் நடவடிக்கைகளுக்கு இது காரணமாக இருந்தது. 1956-இல் ஐக்கிய இராச்சியமும், பிரான்சும் எகிப்து தேசியமயமாக்கியசூயசு கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதை குறிக்கோளாகக் கொண்டிருந்தன. சூயசு கால்வாய் மற்றும்திரான் நீரிணை ஆகியவை இசுரேலிய கப்பல்களுக்குத் தொடர்ந்து மூடப்பட்டது, இசுரேலின் தெற்குப் பகுதி மக்களுக்கு எதிராக அதிகரித்து வந்த பெதாயீன் தாக்குதல்கள் மற்றும் சமீபத்திய அரேபிய அச்சுறுத்தும் அறிக்கைகள் ஆகியவை எகிப்தை இசுரேல் தாக்குவதற்குக் காரணமாயின.[186][187][188] ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சுடன் இசுரேல் ஓர் இரகசியக் கூட்டணியில் இணைந்தது.சூயசு நெருக்கடியின் போதுசினாய் தீபகற்பத்தை இசுரேல் எளிதாக வென்றது. ஆனால், இசுரேலிய கப்பல் போக்குவரத்து உரிமைகளுக்கான உத்தரவாதங்களுக்கு மாற்றாக அத்தீபகற்பத்திலிருந்து பின் வாங்க ஐக்கிய நாடுகள் அவை இசுரேலுக்கு அழுத்தம் கொடுத்தது.[189][190][191] இப்போரானது இசுரேலிய எல்லை ஊடுருவல்களில் பெருமளவு குறைவுக்குக் காரணமானது.[192]
1960-களின் தொடக்கத்தின் போது இசுரேல் நாசி போர் குற்றவாளியானஅடோல்வ் ஏச்மெனை அர்ஜென்டினாவில் கைது செய்து விசாரணைக்காக இசுரேலுக்குக் கொண்டு வந்தது.[193] ஓர் இசுரேலிய குடிசார் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு இசுரேலால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரே நபராக ஏச்மென் உள்ளார்.[194] 1963-இல் இசுரேலிய அணு ஆயுத ஒழிப்புத் திட்டம் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுடன் ஒரு தூதரக எதிர்ப்பு நிலையை இசுரேல் எடுத்தது.[195][196]
1964-இலிருந்து அரேபிய நாடுகள்யோர்தான் ஆற்றின் நீரை கடற்கரைச் சமவெளிக்குள் வழி மாற்றும் இசுரேலிய திட்டங்கள் குறித்த தம் கவலையைத் தெரிவித்துள்ளன.[197] இசுரேலுக்கு நீர் ஆதாரங்களைத் தடுப்பதற்காக ஆறு தோன்றும் இடத்தை வழி மாற்ற முயற்சித்துள்ளன என குறிப்பிடப்படுகிறது. ஒரு பக்கம் இசுரேல் மற்றும் மறு பக்கம் சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களுக்கு இது காரணமாக உள்ளது. எகிப்திய அதிபர்சமால் அப்துல் நாசிரால் தலைமை தாங்கப்பட்ட அரேபிய தேசியவாதிகள் இசுரேலை அங்கீகரிக்க மறுக்கின்றனர். இந்த அரசு நீக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றனர்.[198][199][200] 1966 வாக்கில் இசுரேலிய மற்றும் அரேபியப் படைகளுக்கு இடையில் யுத்தங்கள் நடைபெறும் நிலைக்கு இசுரேலிய-அரபு உறவு முறைகளானவை மோசமடைந்தன.[201]
இசுரேல் கொண்டிருந்த நிலப்பரப்பு: ஆறு நாள் போருக்கு முன் ஆறு நாள் போருக்குப் பின் 1982-இல்சினாய் தீபகற்பமானது எகிப்திடம் திருப்பி அளிக்கப்பட்டது.
மே 1967-இல் இசுரேலுடனான எல்லைக்கு அருகில் எகிப்து தனது இராணுவத்தைக் குவித்தது. 1957-ஆம் ஆண்டிலிருந்து சினாய் தீபகற்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ. நா. அமைதிப்படையை வெளியேற்றியது. செங்கடலுக்கான இசுரேலின் அனுமதியைத் தடை செய்தது.[202][203][204] பிற அரபு நாடுகளும் தங்களது படைகளைத் திரட்டத் தொடங்கின.[205] இந்த நடவடிக்கைகளைக் காரணமாகக் காட்டி இசுரேல் சூன் மாதத்தில் எகிப்துக்கு எதிராக முன்னெச்சரிக்கை தாக்குதலைத் (குவிமைய நடவடிக்கை) தொடங்கியது. யோர்தான், சிரியா மற்றும் ஈராக்கு ஆகிய நாடுகள் இசுரேலைத் தாக்கின. இந்தஆறு நாள் போரில் யோர்தானிடமிருந்து மேற்குக் கரை, எகிப்திடமிருந்து காசாக் கரை மற்றும் சினாய் தீபகற்பம், மற்றும் சிரியாவிடமிருந்து கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளை இசுரேல் கைப்பற்றி ஆக்கிரமித்தது.[206] எருசலேமின் எல்லைகளானவை விரிவாக்கப்பட்டன. கிழக்கு எருசலேமும் எருசலேமுடன் இணைக்கப்பட்டது. 1949-ஆம் ஆண்டின் பச்சைக் கோடானது இசுரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளுக்கு இடையிலான நிர்வாக எல்லையாக உருவானது.[207]
1967-ஆம் ஆண்டு போர் மற்றும் அரபு நாடுகள் கூட்டமைப்பின்" மூன்று முறை இல்லை" தீர்மானம் ஆகியவற்றைத் தொடர்ந்து 1967-1970 ஆம் ஆண்டுகளின்தேய்வழிவுப் போரின் போது சினாய் தீபகற்பத்திலிருந்த எகிப்தியரிடமிருந்து இசுரேல் தாக்குதல்களை எதிர் கொண்டது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளிலிருந்த இசுரேலியர்களை இலக்காக்கிய பாலத்தீனிய குழுக்களிடமிருந்து உலகளவில் மற்றும் இசுரேலில் தாக்குதல்களை இசுரேல் எதிர் கொண்டது. பாலத்தீனிய மற்றும் அரேபியக் குழுக்களிலேயே மிக முக்கியமானதுபாலத்தீன விடுதலை இயக்கமாகும். இது 1964-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. "தாயகத்தை விடுவிப்பதற்கான ஒரே வழி ஆயுதமேந்திய போராட்டமே" என இது தொடக்கத்தில் உறுதியாக இருந்தது.[208] 1960-களின் பிற்பகுதி மற்றும் 1970-களின் தொடக்கப் பகுதியில் உலகம் முழுவதும் இருந்த இசுரேலிய மற்றும் யூத இலக்குகளுக்கு எதிராக[209] பாலத்தீனிய குழுக்கள் தாக்குதல்களைத் தொடங்கின.[210][211] மியூனிச்சில் நடைபெற்ற1972-ஆம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இசுரேலிய தடகள வீரர்கள் கொலை செய்யப்பட்டதும் இதில் அடங்கும். இக்கொலைகளை ஒருங்கிணைத்தவர்களுக்கு எதிராக ஓர் அரசியல் கொலை நடவடிக்கையைப் பதிலுக்கு இசுரேல் அரசாங்கமானது நடத்தியது. சிரியா மற்றும் லெபனான் மீது குண்டு வீசியது. லெபனானிலிருந்த பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைமையகம் மீது ஓர் ஊடுருவலை நடத்தியது.
6 அக்டோபர் 1973 அன்று சினாய் தீபகற்பம் மற்றும் கோலான் குன்றுகளிலிருந்த இசுரேலியப் படைகளுக்கு எதிராக எகிப்து மற்றும் சிரிய இராணுவங்கள் ஒரு திடீர்த் தாக்குதலை நடத்தின.யோம் கிப்பூர்ப் போர் தொடங்கப்பட்டது. எகிப்திய மற்றும் சிரிய படைகளை இசுரேல் வெளியேற்றிய போது 25 அக்டோபர் அன்று இப்போரானது முடிவுக்கு வந்தது. ஆனால், பெரும் இழப்புகளை இசுரேல் சந்தித்தது.[212] ஓர் உள்நாட்டு விசாரணையானது இப்போருக்கு முன்னர் மற்றும் பின்னர் நடந்த தோல்விகளுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என அதிகாரபூர்வமாக விடுவித்தது. ஆனால், பொது மக்களின் கோபமானது பிரதமர்கோல்டா மேயரைப் பதவி விலகும் நிலைக்குத் தள்ளியது.[213][மேம்பட்ட ஆதாரம் தேவைப்படுகிறது] சூலை 1976-இல் இசுரேலிலிருந்து பிரான்சுக்குப் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தை பாலத்தீனிய கரந்தடிப் போர் வீரர்கள் கடத்தினர். இசுரேலிய அதிரடிப்படை வீரர்கள்106 இசுரேலியக் கைதிகளில் 102 பேரை விடுவித்தனர்.
அமைதி நடவடிக்கை
தொழிலாளர் கட்சியிடமிருந்துமெனசெம் பெகினின் லிகுத் கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றிய போது இசுரேலிய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனையை 1977-ஆம் ஆண்டின் கெனெசெட் தேர்தல்களானவை குறித்தன.[214] அதே ஆண்டின் பிற்பகுதியில், எகிப்திய அதிபர்அன்வர் சாதாத் இசுரேலுக்கு ஒரு பயணம் மேற்கொண்டார். ஓர் அரபு நாட்டின் தலைவர் இசுரேலை அங்கீகரித்த முதல் நிகழ்வாககெனெசெட் நாடாளுமன்றத்தில் பேசினார்.[215] சாதாதும், பெகினும் தாவீது முகாம் ஒப்பந்தங்கள் (1978) மற்றும் எகிப்திய-இசுரேலிய அமைதி ஒப்பந்தம் (1979) ஆகியவற்றில் கையொப்பமிட்டனர்.[216] இதற்குப் பதிலாக இசுரேல் சினாய் தீபகற்பத்திலிருந்து பின்வாங்கியது. மேற்குக் கரை மற்றும் காசாக் கரையிலிருந்த பாலத்தீனர்களுக்கு தன்னாட்சி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இசுரேல் ஒப்புக்கொண்டது.[216]
11 மார்ச் 1978 அன்று லெபனானிலிருந்து வந்த ஒரு பாலத்தீன விடுதலை இயக்க கரந்தடி ஊடுருவலானது கடற்கரைச் சாலை கொலைகளுக்குக் காரணமானது. பாலத்தீன விடுதலை இயக்கத் தளங்களை அழிப்பதற்காக தெற்கு லெபனான் மீது பதிலுக்கு இசுரேல் ஒரு தாக்குதலைத் தொடங்கியது. இதே வேளையில், பெகினின் அரசாங்கமானது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இசுரேலியர்கள் குடியமர மானியங்களை வழங்கியது. அங்குள்ள பாலத்தீனியர்களுடன் இது பிரச்சனையை அதிகரித்தது.[217]
1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட எருசலேம் சட்டமானது சிலரால் எருசலேம் 1967-ஆம் ஆண்டு இசுரேலால் இணைக்கப்பட்டதை அரசாங்க ஆணையின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்துவதாக நம்புகின்றனர்.இந்நகரத்தின் நிலை குறித்த பன்னாட்டு சர்ச்சையை இது மீண்டும் தொடங்கியது. இசுரேலின் நிலப்பரப்பை எந்த ஒரு இசுரேலிய சட்டமும் வரையறுக்கவில்லை. எந்த ஒரு சட்டமும், குறிப்பாக கிழக்கு எருசலேமை இணைக்கவில்லை.[218] 1981-இல் இசுரேல் செயல்பாட்டு முறையில் கோலான் குன்றுகளை இணைத்தது.[219] பன்னாட்டு சமூகமானது பெரும்பாலும் இந்த நடவடிக்கைகளை நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையானது எருசலேம் சட்டம் மற்றும் கோலான் குன்றுகள் சட்டம் ஆகிய இரு சட்டங்களையும் சட்டப்படி செல்லாதது என்று கூறி அறிவித்துள்ளது.[220][221] 1980-களிலிருந்து பல அலைகளாகஎத்தியோப்பிய யூதர்கள் இசுரேலுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். 1990 மற்றும் 1994-க்கு இடையில் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த நாடுகளிலிருந்து வந்த யூத குடியேறிகளால் இசுரேலின் மக்கள் தொகையானது 12% அதிகரித்துள்ளது.[222]
7 சூன் 1981 அன்றுஈரான்-ஈராக்கு போரின் போது இசுரேலிய விமானப் படையானது அந்நேரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஈராக்கின் ஒற்றை அணு உலையைஅழித்தது. ஈராக்கிய அணு ஆயுதத் திட்டத்தை அழிக்கும் பொருட்டு இவ்வாறு குண்டு வீசியது.[223] 1982-இல் ஒரு தொடர்ச்சியான பாலத்தீன விடுதலை இயக்க தாக்குதலைத் தொடர்ந்து அந்த இயக்க தளங்களை அழிப்பதற்காக லெபனான் மீது இசுரேல் படையெடுத்தது.[224] முதல் ஆறு நாட்களில் லெபனானிலிருந்த அந்த இயக்கத்தின் இராணுவப் படைகளை இசுரேல் அழித்தது. சிரியாவைத் தீர்க்கமாகத் தோற்கடித்தது. சபிரா மற்றும் சதிலா கொலைகளுக்கு மறைமுகப் பொறுப்புடையவர்களாக பெகின் மற்றும் பல இசுரேலிய தளபதிகளை ஓர் இசுரேலிய அரசாங்க விசாரணையானது (ககன் குழு) குறிப்பிட்டது. பாதுகாப்பு அமைச்சர்ஏரியல் சரோன் "தனிப்பட்ட முறையில் பொறுப்புடையவர்" என்று குறிப்பிட்டது.[225] சரோன் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.[226] 1985-இல் சைப்பிரசில் ஒரு பாலத்தீனிய தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலாக இசுரேல் துனிசியாவிலிருந்தபாலத்தீனிய விடுதலை இயக்கத் தலைமையகங்கள் மீது குண்டு வீசியது. 1986-இல் பெரும்பாலான லெபனானிலிருந்து இசுரேல் பின்வாங்கியது. ஆனால், 2000-ஆம் ஆண்டு வரை தெற்கு லெபனானில் ஓர் எல்லை நில காப்புப் பகுதியை தொடர்ந்து ஆக்கிரமித்திருந்தது. இங்கிருந்து தான் இசுரேலியப் படைகள்ஹிஸ்புல்லாவுடனான சண்டையில் ஈடுபட்டனர். இசுரேலிய ஆட்சிக்கு எதிரான ஒரு பாலத்தீனிய எழுச்சியான முதல் இன்டிபடா[227] 1987-ஆம் ஆண்டு வெடித்தது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசாவில் ஒருங்கிணைக்கப்படாத ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் அலைகளாக நடைபெற்றன. தொடர்ந்த ஆறு ஆண்டுகளின் போக்கில், இன்டிபடாவானது மிகவும் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டதாகவும், இசுரேலிய ஆக்கிரமிப்புக்கு இடர்ப்பாடு ஏற்படுத்தும் குறிக்கோளை அடைய பொருளாதார மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவும் இருந்தது. 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.[228] 1991-ஆம் ஆண்டின்வளைகுடா போரின் போது பாலத்தீன விடுதலை இயக்கமானதுசதாம் உசேனையும், இசுரேலுக்கு எதிரான ஈராக்கிய ஏவுகணைத் தாக்குதலுக்கும் ஆதரவளித்தது. பொது மக்கள் விரும்பிய போதிலும், பதில் தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு அமெரிக்காவின் அழைப்பிற்கு இசுரேல் இணங்கியது.[229][230]
சிமோன் பெரெஸ் (இடது),இட்சாக் ரபீன் (நடுவில்) மற்றும் யோர்தானின் மன்னர் உசேன் (வலது) ஆகியோர் 1994-இல் இசுரேல்-யோர்தான் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னர்.
1992-இல் இசுரேலின் அண்டை நாடுகளுடன் சமரசம் செய்து கொள்வதற்கு தன் கட்சி அழைப்பு விடுத்த ஒரு தேர்தலுக்குப் பின்இட்சாக் ரபீன் பிரதமரானார்.[231][232] அடுத்த ஆண்டு இசுரேல் பக்கம்சிமோன் பெரெஸ் மற்றும் பாலத்தீன விடுதலை இயக்கத்தின் பக்கம்யாசர் அராபத் ஆகியோர் ஆசுலோ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தமானது மேற்குக் கரை மற்றும் காசாக் கரையின் பகுதிகளை ஆளும் உரிமையைபாலத்தீன தேசிய ஆணையத்திற்கு வழங்கியது.[233] பாலத்தீன விடுதலை இயக்கம் ஒரு நாடாக இசுரேலின் உரிமையை அங்கீகரித்தது. தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர உறுதியளித்தது.[234] 1994-இல் இசுரேல்-யோர்தான் அமைதி ஒப்பந்தமானது கையொப்பமிடப்பட்டது. இசுரேலுடன் உறவுமுறைகளைப் புதுப்பித்த இரண்டாவது அரபு நாடாக யோர்தான் உருவானது.[235] இசுரேலிய குடியிருப்புகள் அமைக்கப்படுவது தொடர்ந்தது, தணிக்கைச் சாவடிகள் ஆகியவை தொடர்ந்து நடத்தப்பட்டது[236] மற்றும் பொருளாதார நிலை மோசமடைந்தது ஆகியவற்றால் இந்த ஒப்பந்தங்களுக்கான அரேபியப் பொது மக்களின் ஆதரவானது பாதிக்கப்பட்டது.[237] பாலத்தீனிய தற்கொலைப்படைத் தாக்குதலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தங்களுக்கான இசுரேலிய பொது மக்களின் ஆதரவு மங்கத் தொடங்கியது. நவம்பர் 1995-இல் இந்த ஒப்பந்தங்களை எதிர்த்த ஒரு வலதுசாரி யூதனான இகால் அமீரால் ராபின் அரசியல் கொலை செய்யப்பட்டார்.[238]
1900-களின் முடிவின் போதுபெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் பதவி வகித்த காலத்தில்எபிரோனிலிருந்து பின் வாங்க இசுரேல் ஒப்புக் கொண்டது.[239] எனினும், இது என்றுமே அதிகாரப்பூர்வமாக ஏற்புடையதாக்கப்படவில்லை அல்லது செயல்படுத்தப்படவில்லை.[240] இவர் வய் ஆற்று குறிப்பாணையில் கையொப்பமிட்டார். மேற்குக் கரைக்கென மேற்கொண்ட துருப்புகளை ஒதுக்குதல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்ததாக இந்த குறிப்பானை திகழ்ந்தது. மனித உரிமை முறைகேடுகளை "ஊக்குவித்ததற்காக" இந்த குறிப்பாணையானது பெரிய பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டது.[241][242]1999-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரான எகுத் பரக் தெற்கு லெபனானிலிருந்து படைகளைத் திரும்பப் பெற்றார்.2000-ஆம் ஆண்டின் தாவீது முகாம் உச்சி மாநாட்டில் ஐக்கிய அமெரிக்க அதிபர்பில் கிளிண்டன், பாலத்தீன தேசிய ஆணையத் தலைவர் யாசர் அராபத் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருபாலத்தீன நாட்டை உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தை வழங்க பரக் முன் வந்தார். இதற்கு எருசலேம் ஒரு பகிர்ந்து கொள்ளப்பட்ட தலைநகரமாகவும், ஒட்டு மொத்த காசாக் கரை மற்றும் மேற்குக் கரையின் 90%-க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளடங்கியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டது.[243] இரு பக்கத்தினரும் ஒருவர் மற்றொருவரை பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கான காரணமாகக் குற்றம் சாட்டினர்.
21-ஆம் நூற்றாண்டு
2000-களின் பிற்பகுதியில்கோயில் மலைக்கு ஒரு சர்ச்சைக்குரிய பயணத்தை மேற்கொண்டதற்குப் பிறகு இரண்டாவது இன்டிபடா தொடங்கியது. இந்த பிரபலமான எழுச்சியானது இசுரேலிய அரசிடமிருந்து சரிவிகித சமானமற்ற ஒடுக்குமுறையை எதிர்கொண்டது.[244] பாலத்தீனிய தற்கொலைப் படை வெடிகுண்டுத் தாக்குதல்களானவை இறுதியாக இன்டிபடாவின் ஒரு தொடர்ந்து நடக்கும் நிகழ்வாயின.[245] அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்குப் பிறகு அராபத்தால் இன்டிபடாவானது முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது என சில விமர்சகர்கள் வாதிட்டனர்.[246][247][248][249] 2001 தேர்தலில் சரோன் பிரதமரானார். காசாக் கரையிலிருந்து தன்னிச்சையாகப் படைகளைப் பின் வாங்க வைத்தல், மேற்குக் கரை தடுப்பைக் கட்டமைப்பதற்குத் தலைமை தாங்குதல்[250] மற்றும் இன்டிபடாவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான[251] தனது திட்டத்தை இவர் செயல்படுத்தத் தொடங்கினார். 2000 - 2008 காலத்தில் 1,063 இசுரேலியர், 5,517 பாலத்தீனியர் மற்றும் 64 அயல் நாட்டு குடிமகன்கள் கொல்லப்பட்டனர்.[252]
சூலை 2006-இல் இசுரேலின் வடக்கு எல்லை சமூகங்கள் மீதான ஒரு ஹிஸ்புல்லா சேணேவி தாக்குதல், எல்லை தாண்டி இசுரேலிய இராணுவத்தினர் இருவர் கடத்திச் செல்லப்பட்டது ஆகியவை ஒரு மாதம் நீடித்த இரண்டாவது லெபனான் போருக்குக் காரணமாயின. லெபனான் மீதான இசுரேலின் படையெடுப்பும் இதில் அடங்கும்.[253][254] ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானம் 1701 இயற்றப்பட்டதற்குப் பிறகு ஆகத்து 2006-இல் இப்போரானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அக்டோபர் 2006 வாக்கில் லெபனானிலிருந்து இசுரேல் படைகள் பெரும்பாலும் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், கசர் கிராமத்தின் லெபனான் பிரிவைத் தொடர்ந்து ஆக்கிரமித்திருந்தன.[255][256]
2007-இல் இசுரேலிய விமானப் படையானது சிரியாவில் ஓர் அணு உலையைஅழித்தது. 2008-இல்ஹமாஸ் மற்றும் இசுரேலுக்கு இடையிலான ஓர் அமைதி ஒப்பந்தமானது முறிந்தது. மூன்று வார காசா போருக்கு இது காரணமாகியது.[257][258] தெற்கு இசுரேலிய நகரங்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட பாலத்தீனிய ஏவூர்தி தாக்குதல்களுக்குப் பதில்[259] என இசுரேல் குறிப்பிட்ட இந்த நடவடிக்கையில் 2012-இல் காசாக் கரையில் ஓர் இராணுவ நடவடிக்கையை இசுரேல் தொடங்கியது. இது எட்டு நாட்களுக்கு நீடித்தது.[260] சூலை 2014-இல் ஏவூர்தி தாக்குதல்களை ஹமாஸ் அதிகரித்ததைத் தொடர்ந்து காசாவில் மற்றுமொருஇராணுவ நடவடிக்கையை இசுரேல் தொடங்கியது.[261] மே 2021-இல் காசா மற்றும் இசுரேலில் மற்றுமொரு சுற்று சண்டையானது நடைபெற்றது. இது 11 நாட்களுக்கு நீடித்தது.[262]
இசுரேலிய பிரதமர்பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் இசாக் எர்சோக்குடன் ஐக்கிய அமெரிக்க அதிபர்ஜோ பைடன் டெல் அவீவில் 18 அக்டோபர் 2023 அன்று
2010-களின் வாக்கில் இசுரேல் மற்றும்அரபு நாடுகள் கூட்டமைப்பின் நாடுகளுக்கு இடையில் அதிகரித்து வந்த பிராந்திய ஒத்துழைப்பானது ஏற்பட்டது. இதன் உச்ச நிலையாகஆபிரகாம் ஒப்பந்தங்கள் கையொப்பமிடுவது நடைபெற்றது. இசுரேலிய பாதுகாப்பு சூழ்நிலையானது பாரம்பரியஅரபு-இசுரேல் முரண்பாட்டிலிருந்து, ஈரான்-இசுரேல் சார்பாண்மை முரண்பாடு மற்றும் சிரிய உள்நாட்டுப் போரின் போது ஈரானுடனான நேரடி முரண்பாடு என மாறியது. 7 அக்டோபர் 2023 அன்று ஹமாஸால் தலைமை தாங்கப்பட்ட காசாவிலிருந்த பாலத்தீனிய ஆயுதக் குழுக்கள் இசுரேல் மீதுஒரு தொடர்ச்சியான ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலைத் தொடங்கின.காசா போரின் தொடக்கத்திற்கு இது காரணமாகியது.[263] அந்த நாளில் தோராயமாக 1,300 இசுரேலியர்கள், பெரும்பான்மையாகக் குடிமக்கள், காசாக் கரை எல்லைக்கு அருகிலிருந்த சமூகங்களிலும், ஓர் இசை விழாவின் போதும் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்ட கைதிகள் கடத்தப்பட்டு காசாக் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.[264][265][266]
தன் நிலப்பரப்பிலிருந்து போராளிகளை நீக்கியதற்குப் பிறகு நவீன வரலாற்றில் மிக அதிக அழிவை ஏற்படுத்திய குண்டுவீச்சு நடவடிக்கைகளில் ஒன்றை இசுரேல் தொடங்கியது.[267][268] ஹமாஸை அழிப்பது மற்றும் கைதிகளை விடுவிப்பது ஆகிய குறிப்பிடப்பட்ட இலக்குகளுடன் 27 அக்டோபர் அன்று காசா மீது படையெடுத்தது.[269][270] 2008-ஆம் ஆண்டிலிருந்து காசா-இசுரேல் முரண்பாட்டின் ஐந்தாவது போர் இதுவாகும். ஒட்டு மொத்தஇசுரேல்-பாலத்தீன முரண்பாட்டில்[271] பாலத்தீனியருக்கு அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியதாக இது உள்ளது. 1973-ஆம் ஆண்டின்யோம் கிப்பூர்ப் போரிலிருந்து இப்பகுதியில் மிக முக்கியமான இராணுவச் சண்டையாகவும் இது உள்ளது.[272]
ஏப்ரல் 2024-இல் ஈரான் மீது ஓர் அலை போன்ற விமானத் தாக்குதல்களை இசுரேல் தொடங்கியது. இசுரேலுக்கு எதிராக ஈரானியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்குப் பிறகு இது நடைபெற்றது என்று கூறப்பட்டது. அக்டோபர் 2024-இல் லெபனான் மீது இசுரேல் படையெடுத்தது.[273] மூன்று வாரங்கள் கழித்து ஈரானுடன் பரற்பர ஏவுகணைத் தாக்குதல்கள் நடைபெற்றன. அந்த மாதத்தில் முன்னர் நடத்தப்பட்டிருந்த ஈரானியத் தாக்குதலுக்கு பதிலாக இது நடைபெற்றது என்று கூறப்பட்டது.[274] காசாவில் ஹமாஸுக்கு ஆதரவாக இசுரேலை நோக்கி ஹிஸ்புல்லா ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியதன் காரணமாக அக்டோபர் 2023-இலிருந்து இசுரேல்- ஹிஸ்புல்லா முரண்பாடானது கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு நடைபெற்றதற்குப் பிறகு, செப்டம்பர் 2024-இல் ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளரானஅசன் நசுரல்லாவை இசுரேல் அரசியல் கொலை செய்தது.[275] நவம்பர் 2024-இல் ஏற்படுத்தப்பட்டஅமைதி ஒப்பந்தமானது லெபனானிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுமாறு இசுரேலுக்கு அறிவுறுத்தியது. பெப்பிரவரி 2025 வாக்கில் இதை பெரும்பாலும் இசுரேல் பின்பற்றியது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு முரணாக தெற்கு லெபனானின் உயர்நிலப் பகுதிகளில் ஐந்து இராணுவ நிலைகளில் இசுரேலியப் படைகள் தொடர்ந்து உள்ளன.[276][277]
சூன் 2025-இல் ஈரான் மீது மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான விமான தாக்குதல்களை இசுரேல் தொடங்கியது. ஈரானிய உயர் அதிகாரிகளில் பலரை அரசியல் கொலை செய்தது. இது ஓர்ஆயுதச் சண்டையாக மாறியது.[278]
ஐக்கிய நாடுகள் சிறப்புக் குழு, பல அரசாங்கங்கள், மற்றும் பல்வேறு நிபுணர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள்காசா போரின் போது குடிமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் காரணமாக பாலத்தீனிய மக்களுக்கு எதிராக இசுரேல் இனப் படுகொலையை நடத்துகிறது என்று முடிவுக்கு வந்தனர்.[279][280][281]
பகல் மற்றும் இரவின் போது இசுரேல் மற்றும் அண்டை நிலப்பரப்புகளின் செயற்கைக்கோள் படம்
வளமான பிறை பிரதேசத்தின்லெவண்ட் பகுதியில் இசுரேல் அமைந்துள்ளது.நடு நிலக் கடலின்கிழக்கு முடிவில் அமைந்துள்ள இது, வடக்கே லெபனான், வடகிழக்கே சிரியா, கிழக்கே யோர்தான் மற்றும் மேற்குக் கரை, மற்றும் தென் மேற்கே எகிப்து மற்றும் காசாக்கரை ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இது 29° மற்றும் 34° வடக்கு அட்சரேகை, 34° மற்றும் 36° கிழக்கு தீர்க்க ரேகைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
இசுரேலின் இறையாண்மையுள்ள நிலப்பரப்பு தோராயமாக 20,770 சதுர கிலோ மீட்டர்களாகும். இது 1949-ஆம் ஆண்டின் அமைதி ஒப்பந்தங்களின எல்லைக் கோடுகளின் படியான அளவீடாகும். 1967-ஆம் ஆண்டின் ஆறு நாள் போரின் போது இசுரேல் கைப்பற்றிய அனைத்து நிலப்பரப்புகளையும் இந்த அளவீடு புறந்தள்ளியுள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பில் 2% நீராகும்.[282] எனினும், இசுரேல் மிகவும் குறுகலான நாடாக இருப்பதால் நடு நிலக்கடலில் இந்நாட்டின்பொருளாதாரத் தனியுரிமைப் பகுதியானது இந்நாட்டின் நிலப் பரப்பளவைப் போல இரு மடங்காக உள்ளது.[283] இந்நாடு இதன் மிக அகலமான இடத்தில் 100 கிலோ மீட்டர் அகலத்துடனும், வடக்கிலிருந்து தெற்காக 400 கிலோமீட்டர் நீளத்துடனும் உள்ளது. இசுரேலிய சட்டத்தின் படி கிழக்கு எருசலேம் மற்றும் கோலான் குன்றுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்த நிலப்பரப்பானது 22,072 சதுர கிலோ மீட்டர்களாகும்.[284] மேற்குக் கரையின் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மற்றும் பாலத்தீன நிர்வாகத்தின் கீழ் பகுதியளவு உள்ள நிலப்பரப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இசுரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மொத்த நிலப்பரப்பானது 27,799 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும்.[285]
சிறிய அளவுடையதாக இருந்தாலும் வேறுபட்ட புவியியல் அம்சங்களுக்குத் தாயகமாக இசுரேல் உள்ளது. தெற்கேநெகேவ் பாலைவனம் முதல் உள்நிலத்தின் வளமான செசுரீல் பள்ளத்தாக்கு வரையிலும்,கலிலேயா,கார்மேல் மலைத் தொடர்களிலிருந்து வடக்கேகோலான் வரையிலும் வேறுபட்டு காணப்படுகிறது. நடுநிலக் கடலின் கடற்கரையில் அமைந்துள்ள இசுரேலின் கடற்கரைச் சமவெளியானது இந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்குத் தாயகமாக உள்ளது.[286] நடு உயர் நிலங்களுக்குக் கிழக்கே யோர்தான் பிளவுப் பள்ளத்தாக்கானது அமைந்துள்ளது. 6,500 கிலோமீட்டர் நீளமுடையபெரும் பிளவுப் பள்ளத்தாக்கின் ஒரு சிறிய பகுதி இதுவாகும்.யோர்தான் ஆறானது யோர்தான் பிளவுப் பள்ளத்தாக்கின் நெடுகில் ஓடுகிறது. இதுஎர்மோன் மலையிலிருந்து குலா பள்ளத்தாக்கு வழியாக,கலிலேயக் கடலிலிருந்துசாக்கடலுக்கு ஓடுகிறது. உலகின் வறண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகத் தாழ்ந்த புள்ளி சாக்கடல் ஆகும்.[287] மேற்கொண்டு தெற்கே அரபா பகுதி அமைந்துள்ளது.செங்கடலின் ஒரு பகுதியானஎய்லத்து வளைகுடாவில் இப்பகுதி முடிவடைகிறது. மக்தேசு அல்லது "வட்டு வடிவ அரிப்பு மலைப் பக்கப் பகுதி" ஆகியவை நெகேவ் மற்றும்சினாய் தீபகற்பத்தில் மட்டுமே காணப்படும் தனித்துவமானவையாகும். இதில் மிகப் பெரியதாக மக்தேசு ரமோன் 38 கிலோ மீட்டர் நீளத்துடன் அமைந்துள்ளது.[288] நடு நிலக் கடல் வடிநிலத்தில் உள்ள நாடுகளில் ஒரு சதுர மீட்டருக்கு மிக அதிக எண்ணிக்கையிலான தாவர இனங்களைக் கொண்டுள்ள நாடாக இசுரேல் உள்ளது.[289] இந்நாடு நான்கு நில சூழ்நிலைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை கிழக்கு நடுநில பசுமை மாறா ஊசியிலை-பாலைவன-அகண்ட இலைக் காடுகள், தெற்கு அனத்தோலிய மலைப்பகுதிசார் ஊசியிலை மற்றும் இலையுதிர் காடுகள்,அரேபியப் பாலைவனம் மற்றும் மெசொப்பொத்தேமியப் புதர் பாலைவனம் ஆகியவையாகும்.[290] 2016-ஆம் ஆண்டில் காடுகளானவை இந்நாட்டின் 8.5% நிலப்பரப்பை ஆக்கிரமித்திருந்தன. 1948-இல் 2% என்பதிலிருந்து இது ஓர் அதிகரிப்பாகும். யூத தேசிய நிதியத்தால் நடத்தப்பட்ட ஒரு பெருமளவு காடு வளர்க்கும் திட்டத்தின் விளைவு இதுவாகும்.[291][292]
இசுரேலின் நில நாட்டு அமைப்பு
இசுரேல் நிலப்படம்இசுரேல் இட அமைப்பு நிலப்படம்ஞாயிறு மறைவில்டெல் அவீவ் நகரில் ஒரு கரை
மாநகரப் பரப்பளவுகள்
2004 இசுரேல் புள்ளியியல் மையத்தின் கணக்கெடுப்பின் படிடெல் அவீவ் (மக்கள் தொகை 2,933,300),ஹைஃபா (மக்கள் தொகை 980,600),பீர்ஷெபா (மக்கள் தொகை 511,700) ஆகிய மூன்று மாநகரங்கள் இசுரேலில் உள்ளன.[293]ஜெரூசலெமும் இசுரேலின் மாநகரங்களில் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்நகரத்தின் எல்லைகள் உறழ்வு பட்டுள்ளது காரணமாக சரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்கமுடியாது. 2005 கணக்கெடுப்பின் படி அரசின் படி ஜெரூசலெம் மக்கள் தொகை 706,368 ஆகும். சில வேளைகளில் அரபு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையானநாசரேத்தும் மாநகரமாக குறிப்பிட்டுள்ளது.[1]பரணிடப்பட்டது 2007-11-12 at theவந்தவழி இயந்திரம்.
இசுரேலின் ஆட்சி ஒரேயொரு சட்டமன்றத்தின் அடிப்படையில் நிகழுகின்றது. இசுரேலின் நாடாளும் சட்டமன்றத்திற்குகெனெசெட் (Knesset ஃஈபுரு மொழியில் כנסת = கூட்டம், மன்றம், assembly) என்று பெயர். இதில் 120 கெனெசெட் உறுப்பினர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உண்டு.
ஆட்சி செலுத்துவோர்
இசுரேலியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் எனினும் அதிக ஆட்சிப்பொறுப்புகளும் ஆணை மற்றும் கட்டளை இடும் உரிமையும் அற்றவர். தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை தலைமை அமைச்சராய் தேர்ந்தெடுப்பது குடியரசுத் தலைவரின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று. நாட்டை நடத்தும் பொறுப்பும் அதிகாரமும் தலைமை அமைச்சரைச் சேர்ந்தது. தலைமை அமைச்சர் தன் அமைச்சர் குழுவைக்கொண்டு நாட்டை நடத்துவார்.
மக்கள்
மக்கள் வகைப்பாடு
இசுரேலின் நடுவண் புள்ளியியல் துறையின் மே 2006 ஆம் ஆண்டின் கணக்குப்படி இசுரேலில் 7 மில்லியன் உள்ளனர். அவற்றில் 77% மக்கள் யூதர்கள், 18.5% அராபியர்கள், 4.3% மற்ற இனத்தவர்..[294] யூதர்களில் 68% மக்கள் இசுரேலில் பிறந்தவர்கள் (இவர்களை சபரா என்பர்), அல்லது ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர் (இவர்கள் ஓலிம் எனப்படுபவர்), 22% மக்கள் ஐரோப்பாவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் வந்து குடியேறியவர், 10% ஆசியா-ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்.[295]
ஆதாரங்களும் மேற்கோள்களும்
↑யெரூசலம் is the official capital, and the location of the presidential residence, government offices and theகெனெசெட், Israel's Parliament. In 1980, the Knesset asserted Jerusalem's status as the nation's "eternal and indivisible capital", by passing theBasic Law: Jerusalem — Capital of Israel. However, theஐக்கிய நாடுகள் அவை does not recognize this designation. The bulk international community argues that the city is still legally an internationalCorpus separatum and the final issue of the status of Jerusalem will be determined in future Israeli-Palestinian negotiations. Most countries maintain their embassies inடெல் அவீவ் (CIA Factbookபரணிடப்பட்டது 2006-07-16 at theவந்தவழி இயந்திரம்). See the article onஎருசலேம் for more information.
↑"Israel". Central Intelligence Agency. 27 February 2023.Archived from the original on 10 January 2021. Retrieved24 February 2023 – via CIA.gov.
↑Akram, Susan M., Michael Dumper, Michael Lynk, and Iain Scobbie, eds. 2010.International Law and the Israeli-Palestinian Conflict: A Rights-Based Approach to Middle East Peace. Routledge. p. 119: "UN General Assembly Resolution 181 recommended the creation of an international zone, or corpus separatum, in Jerusalem to be administered by the UN for a 10-year period, after which there would be a referendum to determine its future. This approach applies equally to West and East Jerusalem and is not affected by the occupation of East Jerusalem in 1967. To a large extent it is this approach that still guides the diplomatic behaviour of states and thus has greater force in international law."
↑Meir-Glitzenstein, Esther (Fall 2018). "Turning Points in the Historiography of Jewish Immigration from Arab Countries to Israel". Israel Studies (Indiana University Press) 23 (3): 114–122. doi:10.2979/israelstudies.23.3.15. "The mass immigration from Arab countries began in mid-1949 and included three communities that relocated to Israel almost in their entirety: 31,000 Jews from Libya, 50,000 from Yemen, and 125,000 from Iraq. Additional immigrants arrived from Egypt, Morocco, Tunisia, Turkey, Iran, India, and elsewhere. Within three years, the Jewish population of Israel doubled. The ethnic composition of the population shifted as well, as immigrants from Muslim counties and their offspring now comprised one third of the Jewish population—an unprecedented phenomenon in global immigration history. From 1952–60, Israel regulated and restricted immigration from Muslim countries with a selective immigration policy based on economic criteria, and sent these immigrants, most of whom were North African, to peripheral Israeli settlements. The selective immigration policy ended in 1961 when, following an agreement between Israel and Morocco, about 100,000 Jews immigrated to the State. From 1952–68 about 600,000 Jews arrived in Israel, three quarters of whom were from Arab countries and the remaining immigrants were largely from Eastern Europe. Today fewer than 30,000 remain in Muslim countries, mostly concentrated in Iran and Turkey.".
↑Slater 2020, ப. 81–92, 350, "[p. 350] It is no longer a matter of serious dispute that in the 1947–48 period—beginning well before the Arab invasion in May 1948—some 700,000 to 750,000 Palestinians were expelled from or fled their villages and homes in Israel in fear of their lives—an entirely justifiable fear, in light of massacres carried out by Zionist forces."
↑Cleveland, William L.; Bunton, Martin (2016).A History of the Modern Middle East (in ஆங்கிலம்).Westview Press. p. 270.ISBN978-0-429-97513-4.Not only was there no Palestinian Arab state, but the vast majority of the Arab population in the territory that became Israel-over 700,000 people-had become refugees. The Arab flight from Palestine began during the intercommunal war and was at first the normal reaction of a civilian population to nearby fighting-a temporary evacuation from the zone of combat with plans to return once hostilities ceased. However, during spring and early summer 1948, the flight of the Palestinian Arabs was transformed into a permanent mass exodus... .
↑Barton & Bowden 2004, ப. 126. "The Merneptah Stele ... is arguably the oldest evidence outside the Bible for the existence of Israel as early as the 13th century BCE."
↑Hasel, Michael G. (1 January 1994). "Israel in the Merneptah Stela". Bulletin of the American Schools of Oriental Research296 (296): 45–61. doi:10.2307/1357179. *Bertman, Stephen (14 July 2005).Handbook to Life in Ancient Mesopotamia. Oxford University Press.ISBN978-0-19-518364-1. *Meindert Dijkstra (2010). "Origins of Israel between history and ideology". In Becking, Bob; Grabbe, Lester (eds.).Between Evidence and Ideology Essays on the History of Ancient Israel read at the Joint Meeting of the Society for Old Testament Study and the Oud Testamentisch Werkgezelschap Lincoln Nebraska, July 2009. Brill. p. 47.ISBN978-90-04-18737-5.As a West Semitic personal name it existed long before it became a tribal or a geographical name. This is not without significance, though is it rarely mentioned. We learn of a maryanu named ysr"il (*Yi¡sr—a"ilu) from Ugarit living in the same period, but the name was already used a thousand years before in Ebla. The word Israel originated as a West Semitic personal name. One of the many names that developed into the name of the ancestor of a clan, of a tribe and finally of a people and a nation.
↑Eitan Tchernov (1988). "The Age of 'Ubeidiya Formation (Jordan Valley, Israel) and the Earliest Hominids in the Levant". Paléorient14 (2): 63–65. doi:10.3406/paleo.1988.4455.
↑Dever, William G.Beyond the Texts, Society of Biblical Literature Press, 2017, pp. 89–93
↑S. Richard, "Archaeological sources for the history of Palestine: The Early Bronze Age: The rise and collapse of urbanism",The Biblical Archaeologist (1987)
↑Faust 2015, ப. 476: "While there is a consensus among scholars that the Exodus did not take place in the manner described in the Bible, surprisingly most scholars agree that the narrative has a historical core, and that some of the highland settlers came, one way or another, from Egypt."
↑Redmount 2001, ப. 61: "A few authorities have concluded that the core events of the Exodus saga are entirely literary fabrications. But most biblical scholars still subscribe to some variation of the Documentary Hypothesis, and support the basic historicity of the biblical narrative."
↑Finkelstein, Israel; Silberman, Neil Asher (2001).The Bible unearthed: archaeology's new vision of ancient Israel and the origin of its stories (1st Touchstone ed.). Simon & Schuster.ISBN978-0-684-86912-4.
↑Finkelstein, Israel, (2020)."Saul and Highlands of Benjamin Update: The Role of Jerusalem", in Joachim J. Krause, Omer Sergi, and Kristin Weingart (eds.),Saul, Benjamin, and the Emergence of Monarchy in Israel: Biblical and Archaeological Perspectives, SBL Press, Atlanta, GA, p. 48, footnote 57: "...They became territorial kingdoms later, Israel in the first half of the ninth century BCE and Judah in its second half..."
↑Finkelstein & Silberman 2002, ப. 146–147: Put simply, while Judah was still economically marginal and backward, Israel was booming. ... In the next chapter we will see how the northern kingdom suddenly appeared on the ancient Near Eastern stage as a major regional power.
↑Finkelstein & Silberman 2002, ப. 307: "Intensive excavations throughout Jerusalem have shown that the city was indeed systematically destroyed by the Babylonians. The conflagration seems to have been general. When activity on the ridge of the City of David resumed in the Persian period, the-new suburbs on the western hill that had flourished since at least the time of Hezekiah were not reoccupied."
↑Wheeler, P. (2017). "Review of the book Song of Exile: The Enduring Mystery of Psalm 137, by David W. Stowe". The Catholic Biblical Quarterly79 (4): 696–697. doi:10.1353/cbq.2017.0092.
↑Helyer, Larry R.; McDonald, Lee Martin (2013). "The Hasmoneans and the Hasmonean Era". In Green, Joel B.; McDonald, Lee Martin (eds.).The World of the New Testament: Cultural, Social, and Historical Contexts. Baker Academic. pp. 45–47.ISBN978-0-8010-9861-1.கணினி நூலகம்961153992.The ensuing power struggle left Hyrcanus with a free hand in Judea, and he quickly reasserted Jewish sovereignty... Hyrcanus then engaged in a series of military campaigns aimed at territorial expansion. He first conquered areas in the Transjordan. He then turned his attention to Samaria, which had long separated Judea from the northern Jewish settlements in Lower Galilee. In the south, Adora and Marisa were conquered; (Aristobulus') primary accomplishment was annexing and Judaizing the region of Iturea, located between the Lebanon and Anti-Lebanon mountains
↑Ben-Sasson, H.H. (1976).A History of the Jewish People. Harvard University Press. p. 226.ISBN978-0-674-39731-6.The expansion of Hasmonean Judea took place gradually. Under Jonathan, Judea annexed southern Samaria and began to expand in the direction of the coast plain... The main ethnic changes were the work of John Hyrcanus... it was in his days and those of his son Aristobulus that the annexation of Idumea, Samaria and Galilee and the consolidation of Jewish settlement in Trans-Jordan was completed. Alexander Jannai, continuing the work of his predecessors, expanded Judean rule to the entire coastal plain, from the Carmel to the Egyptian border... and to additional areas in Trans-Jordan, including some of the Greek cities there.
↑Ben-Eliyahu, Eyal (30 April 2019).Identity and Territory: Jewish Perceptions of Space in Antiquity. Univ of California Press. p. 13.ISBN978-0-520-29360-1.கணினி நூலகம்1103519319.From the beginning of the Second Temple period until the Muslim conquest—the land was part of imperial space. This was true from the early Persian period, as well as the time of Ptolemy and the Seleucids. The only exception was the Hasmonean Kingdom, with its sovereign Jewish rule—first over Judah and later, in Alexander Jannaeus's prime, extending to the coast, the north, and the eastern banks of the Jordan.
↑72.072.1Schwartz, Seth (2014).The ancient Jews from Alexander to Muhammad. Cambridge University Press. pp. 85–86.ISBN978-1-107-04127-1.கணினி நூலகம்863044259.Archived from the original on 3 April 2024. Retrieved4 February 2024.The year 70 ce marked transformations in demography, politics, Jewish civic status, Palestinian and more general Jewish economic and social structures, Jewish religious life beyond the sacrificial cult, and even Roman politics and the topography of the city of Rome itself. [...] The Revolt's failure had, to begin with, a demographic impact on the Jews of Palestine; many died in battle and as a result of siege conditions, not only in Jerusalem. [...] As indicated above, the figures for captives are conceivably more reliable. If 97,000 is roughly correct as a total for the war, it would mean that a huge percentage of the population was removed from the country, or at the very least displaced from their homes.
↑Werner Eck, "Sklaven und Freigelassene von Römern in Iudaea und den angrenzenden Provinzen", Novum Testamentum 55 (2013): 1–21
↑Raviv, Dvir; Ben David, Chaim (2021). "Cassius Dio's figures for the demographic consequences of the Bar Kokhba War: Exaggeration or reliable account?" (in en). Journal of Roman Archaeology34 (2): 585–607. doi:10.1017/S1047759421000271. பன்னாட்டுத் தர தொடர் எண்:1047-7594. "Scholars have long doubted the historical accuracy of Cassius Dio's account of the consequences of the Bar Kokhba War (Roman History 69.14). According to this text, considered the most reliable literary source for the Second Jewish Revolt, the war encompassed all of Judea: the Romans destroyed 985 villages and 50 fortresses, and killed 580,000 rebels. This article reassesses Cassius Dio's figures by drawing on new evidence from excavations and surveys in Judea, Transjordan, and the Galilee. Three research methods are combined: an ethno-archaeological comparison with the settlement picture in the Ottoman Period, comparison with similar settlement studies in the Galilee, and an evaluation of settled sites from the Middle Roman Period (70–136 CE). The study demonstrates the potential contribution of the archaeological record to this issue and supports the view of Cassius Dio's demographic data as a reliable account, which he based on contemporaneous documentation.".
↑75.075.1Mor, Menahem (18 April 2016).The Second Jewish Revolt. BRILL. pp. 483–484.doi:10.1163/9789004314634.ISBN978-90-04-31463-4.Land confiscation in Judaea was part of the suppression of the revolt policy of the Romans and punishment for the rebels. But the very claim that the sikarikon laws were annulled for settlement purposes seems to indicate that Jews continued to reside in Judaea even after the Second Revolt. There is no doubt that this area suffered the severest damage from the suppression of the revolt. Settlements in Judaea, such as Herodion and Bethar, had already been destroyed during the course of the revolt, and Jews were expelled from the districts of Gophna, Herodion, and Aqraba. However, it should not be claimed that the region of Judaea was completely destroyed. Jews continued to live in areas such as Lod (Lydda), south of the Hebron Mountain, and the coastal regions. In other areas of the Land of Israel that did not have any direct connection with the Second Revolt, no settlement changes can be identified as resulting from it.
↑Oppenheimer, A'haron and Oppenheimer, Nili.Between Rome and Babylon: Studies in Jewish Leadership and Society. Mohr Siebeck, 2005, p. 2.
↑H.H. Ben-Sasson,A History of the Jewish People, Harvard University Press, 1976,பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-674-39731-6, page 334: "In an effort to wipe out all memory of the bond between the Jews and the land, Hadrian changed the name of the province from Judaea to Syria-Palestina, a name that became common in non-Jewish literature."
↑Ariel Lewin.The archaeology of Ancient Judea and Palestine. Getty Publications, 2005 p. 33. "It seems clear that by choosing a seemingly neutral name – one juxtaposing that of a neighboring province with the revived name of an ancient geographical entity (Palestine), already known from the writings of Herodotus – Hadrian was intending to suppress any connection between the Jewish people and that land."பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-89236-800-6
↑Lehmann, Clayton Miles (18 January 2007)."Palestine".Encyclopedia of the Roman Provinces. University of South Dakota. Archived fromthe original on 7 April 2013. Retrieved9 February 2013.
↑הר, משה דוד (2022). "היהודים בארץ-ישראל בימי האימפריה הרומית הנוצרית" [The Jews in the Land of Israel in the Days of the Christian Roman Empire].ארץ-ישראל בשלהי העת העתיקה: מבואות ומחקרים [Eretz Israel in Late Antiquity: Introductions and Studies] (in ஹீப்ரூ). Vol. 1. ירושלים: יד יצחק בן-צבי. pp. 210–212.ISBN978-965-217-444-4.
↑83.083.1Ehrlich, Michael (2022).The Islamization of the Holy Land, 634–1800. Arc Humanities Press. pp. 3–4.ISBN978-1-64189-222-3.கணினி நூலகம்1302180905.The Jewish community strove to recover from the catastrophic results of the Bar Kokhva revolt (132–135 CE). Although some of these attempts were relatively successful, the Jews never fully recovered. During the Late Roman and Byzantine periods, many Jews emigrated to thriving centres in the diaspora, especially Iraq, whereas some converted to Christianity and others continued to live in the Holy Land, especially in Galilee and the coastal plain. During the Byzantine period, the three provinces of Palestine included more than thirty cities, namely, settlements with a bishop see. After the Muslim conquest in the 630s, most of these cities declined and eventually disappeared. As a result, in many cases the local ecclesiastical administration weakened, while in others it simply ceased to exist. Consequently, many local Christians converted to Islam. Thus, almost twelve centuries later, when the army led by Napoleon Bonaparte arrived in the Holy Land, most of the local population was Muslim.
↑David Goodblatt (2006). "The Political and Social History of the Jewish Community in the Land of Israel, c. 235–638". In Steven Katz (ed.).The Cambridge History of Judaism. Vol. IV. Cambridge University Press. pp. 404–430.ISBN978-0-521-77248-8.Few would disagree that, in the century and a half before our period begins, the Jewish population of Judah () suffered a serious blow from which it never recovered. The destruction of the Jewish metropolis of Jerusalem and its environs and the eventual refounding of the city... had lasting repercussions. [...] However, in other parts of Palestine the Jewish population remained strong [...] What does seem clear is a different kind of change. Immigration of Christians and the conversion of pagans, Samaritans and Jews eventually produced a Christian majority
↑Bar, Doron (2003). "The Christianisation of Rural Palestine during Late Antiquity". The Journal of Ecclesiastical History54 (3): 401–421. doi:10.1017/s0022046903007309. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0469. https://archive.org/details/sim_journal-of-ecclesiastical-history_2003-07_54_3/page/n7. "The dominant view of the history of Palestine during the Byzantine period links the early phases of the consecration of the land during the fourth century and the substantial external financial investment that accompanied the building of churches on holy sites on the one hand with the Christianisation of the population on the other. Churches were erected primarily at the holy sites, 12 while at the same time Palestine's position and unique status as the Christian 'Holy Land' became more firmly rooted. All this, coupled with immigration and conversion, allegedly meant that the Christianisation of Palestine took place much more rapidly than that of other areas of the Roman empire, brought in its wake the annihilation of the pagan cults and meant that by the middle of the fifth century there was a clear Christian majority.".
↑"Roman Palestine".Encyclopedia Britannica.Archived from the original on 30 October 2023. Retrieved30 March 2023.
↑Judaism in late antiquity, Jacob Neusner, Bertold Spuler, Hady R Idris, Brill, 2001, p. 155
↑89.089.1לוי-רובין, מילכה; Levy-Rubin, Milka (2006). "The Influence of the Muslim Conquest on the Settlement Pattern of Palestine during the Early Muslim Period / הכיבוש כמעצב מפת היישוב של ארץ-ישראל בתקופה המוסלמית הקדומה". Cathedra: For the History of Eretz Israel and Its Yishuv / קתדרה: לתולדות ארץ ישראל ויישובה (121): 53–78. பன்னாட்டுத் தர தொடர் எண்:0334-4657.
↑90.090.1Ellenblum, Ronnie (2010).Frankish Rural Settlement in the Latin Kingdom of Jerusalem. Cambridge University Press.ISBN978-0-511-58534-0.கணினி நூலகம்958547332.From the data given above it can be concluded that the Muslim population of Central Samaria, during the early Muslim period, was not an autochthonous population which had converted to Christianity. They arrived there either by way of migration or as a result of a process of sedentarization of the nomads who had filled the vacuum created by the departing Samaritans at the end of the Byzantine period [...] To sum up: in the only rural region in Palestine in which, according to all the written and archeological sources, the process of Islamization was completed already in the twelfth century, there occurred events consistent with the model propounded by Levtzion and Vryonis: the region was abandoned by its original sedentary population and the vacuum was apparently filled by nomads who, at a later stage, gradually became sedentarized
↑Al-Fasi, D. (1936). Solomon L. Skoss (ed.).The Hebrew-Arabic Dictionary of the Bible, Known as 'Kitāb Jāmiʿ al-Alfāẓ' (Agron) (in ஹீப்ரூ). Vol. 1. New Haven:Yale University Press. p. xxxix–xl (Introduction).
↑Gil, Moshe (1997).A History of Palestine, 634–1099. Cambridge University Press.ISBN978-0-521-59984-9.
↑97.097.1Joel Rappel, History of Eretz Israel from Prehistory up to 1882 (1980), vol. 2, p. 531. "In 1662 Sabbathai Sevi arrived to Jerusalem. It was the time when the Jewish settlements of Galilee were destroyed by the Druze: Tiberias was completely desolate and only a few of former Safed residents had returned...."
↑D. Tamar, "On the Jews of Safed in the Days of the Ottoman Conquest" Cathedra 11 (1979), cited Dan Ben Amos, Dov Noy (eds.),Folktales of the Jews, V. 3 (Tales from Arab Lands), Jewish Publication Society 2011 p.61, n.3:Tamar . .challenges David's conclusion concerning the severity of the riots against the Jews, arguing that the support of the Egyptian Jews saved the community of Safed from destruction'.
↑The Solomon Goldman lectures. Spertus College of Judaica Press. 1999. p. 56.ISBN978-0-935982-57-2.The Turks' conquest of the city in 1517, was marked by a violent pogrom of murder, rape, and plunder of Jewish homes. The surviving Jews fled to the "land of Beirut", not to return until 1533.
↑Morgenstern, Arie (2006).Hastening redemption: Messianism and the resettlement of the land of Israel. Oxford University Press. p. 304.ISBN978-0-19-530578-4.
↑Barnai, Jacob (1992).The Jews in Palestine in the Eighteenth Century: Under the Patronage of the Istanbul committee of Officials for Palestine. University Alabama Press. p. 320.ISBN978-0-8173-0572-7.
↑Stein 2003, ப. 88. "As with the First Aliyah, most Second Aliyah migrants were non-Zionist orthodox Jews ..."
↑Moris, Beni (2001).Righteous victims: a history of the Zionist-Arab conflict, 1881 – 2001 (1. Vintage Books ed.). New York, NY: Vintage Books.ISBN978-0-679-74475-7.Many of these newcomers possessed a mixture of socialist and nationalist values, and they eventually succeeded in setting up a separate Jewish economy, based wholly on Jewish labor.
↑Moris, Beni (2001).Righteous victims: a history of the Zionist-Arab conflict, 1881 – 2001 (1. Vintage Books ed.). New York, NY: Vintage Books.ISBN978-0-679-74475-7.Another major cause of antagonism was the labor controversy. The hard core of Second Aliyah socialists, who were to become the Yishuv's leaders in the 1920s and 1930s, believed that the settler economy must not depend on or exploit Arab labor... But, in reality, rather than "meshing," the nationalist ethos had simply overpowered and driven out the socialist ethos... There were other reasons for the "conquest of labor." The socialists of the Second Aliyah used the term to denote three things: overcoming the Jews' traditional remove from agricultural labor and helping them transform into the "new Jews"; struggling against employers for better conditions; and replacing Arabs with Jews in manual jobs.
↑"Mandate for Palestine,"Encyclopaedia Judaica, Vol. 11, p. 862, Keter Publishing House, Jerusalem, 1972
↑Scharfstein 1996, ப. 269. "During the First and Second Aliyot, there were many Arab attacks against Jewish settlements ... In 1920,Hashomer was disbanded andஹகானா ("The Defense") was established."
Smith, Paul J. (2007).The Terrorism Ahead: Confronting Transnational Violence in the Twenty-First.M. E. Sharpe. p. 27.
Louis, William Roger (1986).The British Empire in the Middle East, 1945–1951: Arab Nationalism, the United States, and Postwar Imperialism.ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 430.
Avneri, Aryeh L. (1984).The Claim of Dispossession: Jewish Land-Settlement and the Arabs, 1878–1948. Transaction Publishers.ISBN 978-0-87855-964-0. Retrieved 2 May 2009, p. 224.
Stein, Kenneth W. (1987) [Original in 1984]. The Land Question in Palestine, 1917–1939. University of North Carolina Press.ISBN 978-0-8078-4178-5. pp. 3–4, 247
Imseis 2021, ப. 13–14: "As to territorial boundaries, under the plan the Jewish State was allotted approximately 57 percent of the total area of Palestine even though the Jewish population comprised only 33 percent of the country. In addition, according to British records relied upon by the ad hoc committee, the Jewish population possessed registered ownership of only 5.6 percent of Palestine, and was eclipsed by the Arabs in land ownership in every one of Palestine's 16 sub-districts. Moreover, the quality of the land granted to the proposed Jewish state was highly skewed in its favour. UNSCOP reported that under its majority plan "[t]he Jews will have the more economically developed part of the country embracing practically the whole of the citrus-producing area"—Palestine's staple export crop—even though approximately half of the citrus-bearing land was owned by the Arabs. In addition, according to updated British records submitted to the ad hoc committee's two sub-committees, "of the irrigated, cultivable areas" of the country, 84 per cent would be in the Jewish State and 16 per cent would be in the Arab State"."
Morris 2008, ப. 75: "The night of 29–30 November passed in the Yishuv's settlements in noisy public rejoicing. Most had sat glued to their radio sets broadcasting live from Flushing Meadow. A collective cry of joy went up when the two-thirds mark was achieved: a state had been sanctioned by the international community."
↑153.0153.1Morris 2008, ப. 396: "The immediate trigger of the 1948 War was the November 1947 UN partition resolution. The Zionist movement, except for its fringes, accepted the proposal."
↑Imseis 2021, ப. 14–15: 'Although the Zionists had coveted the whole of Palestine, the Jewish Agency leadership pragmatically, if grudgingly, accepted Resolution 181(II). Although they were of the view that the Jewish national home promised in the Mandate was equivalent to a Jewish state, they well understood that such a claim could not be maintained under prevailing international law..Based on its own terms, it is impossible to escape the conclusion that the partition plan privileged European interests over those of Palestine's indigenous people and, as such, was an embodiment of the Eurocentricity of the international system that was allegedly a thing of the past. For this reason, the Arabs took a more principled position in line with prevailing international law, rejecting partition outright . .This rejection has disingenuously been presented in some of the literature as indicative of political intransigence,69 and even hostility towards the Jews as Jews'
↑Morris 2008, p. 66: at 1946 "The League demanded independence for Palestine as a "unitary" state, with an Arab majority and minority rights for the Jews.", p. 67: at 1947 "The League's Political Committee met in Sofar, Lebanon, on 16–19 September, and urged the Palestine Arabs to fight partition, which it called "aggression," "without mercy." The League promised them, in line with Bludan, assistance "in manpower, money and equipment" should the United Nations endorse partition.", p. 72: at December 1947 "The League vowed, in very general language, "to try to stymie the partition plan and prevent the establishment of a Jewish state in Palestine.""
↑Morris 2008, ப. 187: "A week before the armies marched, Azzam told Kirkbride: "It does not matter how many [Jews] there are. We will sweep them into the sea." ... Ahmed Shukeiry, one of HajAmin al-Husseini's aides (and, later, the founding chairman of the Palestine Liberation Organization), simply described the aim as "the elimination of the Jewish state." ... al-Quwwatli told his people: "Our army has entered ... we shall win and we shall eradicate Zionism""
↑Anita Shapira (1992).Land and Power. Stanford University Press. pp. 416, 419.
↑Segev, Tom. 1949: The First Israelis. "The First Million". Trans. Arlen N. Weinstein. New York: The Free Press, 1986. Print. pp. 105–107
↑Shulewitz, Malka Hillel (2001).The Forgotten Millions: The Modern Jewish Exodus from Arab Lands. Continuum.ISBN978-0-8264-4764-7.
↑Laskier, Michael "Egyptian Jewry under the Nasser Regime, 1956–70" pp. 573–619 fromMiddle Eastern Studies, Volume 31, Issue #3, July 1995 p. 579.
↑"Population, by Religion". Israel Central Bureau of Statistics. 2016.Archived from the original on 18 September 2016. Retrieved4 September 2016.
↑Bard, Mitchell (2003).The Founding of the State of Israel. Greenhaven Press. p. 15.
↑Hakohen, Devorah (2003).Immigrants in Turmoil: Mass Immigration to Israel and Its Repercussions in the 1950s and After. Syracuse University Press.ISBN978-0-8156-2969-6.; for ma'abarot population, see p. 269.
↑Clive Jones, Emma Murphy,Israel: Challenges to Identity, Democracy, and the State,Routledge 2002 p. 37: "Housing units earmarked for the Oriental Jews were often reallocated to European Jewish immigrants; Consigning Oriental Jews to the privations ofma'aborot (transit camps) for longer periods."
↑Isaac Alteras (1993).Eisenhower and Israel: U.S.-Israeli Relations, 1953–1960. University Press of Florida. pp. 192–.ISBN978-0-8130-1205-6.Archived from the original on 19 December 2023. Retrieved1 December 2018.the removal of the Egyptian blockade of the Straits of Tiran at the entrance of the Gulf of Aqaba. The blockade closed Israel's sea lane to East Africa and the Far East, hindering the development of Israel's southern port of Eilat and its hinterland, the Nege. Another important objective of the Israeli war plan was the elimination of the terrorist bases in the Gaza Strip, from which daily fedayeen incursions into Israel made life unbearable for its southern population. And last but not least, the concentration of the Egyptian forces in the Sinai Peninsula, armed with the newly acquired weapons from the Soviet bloc, prepared for an attack on Israel. Here, Ben-Gurion believed, was a time bomb that had to be defused before it was too late. Reaching the Suez Canal did not figure at all in Israel's war objectives.
↑Dominic Joseph Caraccilo (2011).Beyond Guns and Steel: A War Termination Strategy. ABC-CLIO. pp. 113–.ISBN978-0-313-39149-1.Archived from the original on 19 December 2023. Retrieved1 December 2018.The escalation continued with the Egyptian blockade of the Straits of Tiran, and Nasser's nationalization of the Suez Canal in July 1956. On October 14, Nasser made clear his intent:"I am not solely fighting against Israel itself. My task is to deliver the Arab world from destruction through Israel's intrigue, which has its roots abroad. Our hatred is very strong. There is no sense in talking about peace with Israel. There is not even the smallest place for negotiations." Less than two weeks later, on October 25, Egypt signed a tripartite agreement with Syria and Jordan placing Nasser in command of all three armies. The continued blockade of the Suez Canal and Gulf of Aqaba to Israeli shipping, combined with the increased fedayeen attacks and the bellicosity of recent Arab statements, prompted Israel, with the backing of Britain and France, to attack Egypt on October 29, 1956.
↑Alan Dowty (2005).Israel/Palestine. Polity. pp. 102–.ISBN978-0-7456-3202-5.Archived from the original on 19 December 2023. Retrieved1 December 2018.Gamal Abdel Nasser, who declared in one speech that "Egypt has decided to dispatch her heroes, the disciples of Pharaoh and the sons of Islam and they will cleanse the land of Palestine....There will be no peace on Israel's border because we demand vengeance, and vengeance is Israel's death."...The level of violence against Israelis, soldiers and civilians alike, seemed to be rising inexorably.
↑Schoenherr, Steven (15 December 2005)."The Suez Crisis".Archived from the original on 30 April 2014. Retrieved31 May 2013.
↑Gorst, Anthony; Johnman, Lewis (1997).The Suez Crisis. Routledge.ISBN978-0-415-11449-3.
↑Benny Morris (25 May 2011).Righteous Victims: A History of the Zionist-Arab Conflict, 1881–1998. Knopf Doubleday Publishing Group. pp. 300, 301.ISBN978-0-307-78805-4.[p. 300] In exchange (for Israeli withdrawal) the United states had indirectly promised to guarantee Israel's right of passage through the straits (to the Red sea) and its right to self defense if the Egyptian closed them....(p 301) The 1956 war resulted in a significant reduction of...Israeli border tension. Egypt refrained from reactivating the Fedaeen, and...Egypt and Jordan made great effort to curb infiltration
↑Shlomo Shpiro (2006). "No place to hide: Intelligence and civil liberties in Israel". Cambridge Review of International Affairs19 (44): 629–648. doi:10.1080/09557570601003361.
↑Samir A. Mutawi (2002).Jordan in the 1967 War. Cambridge University Press. p. 93.ISBN978-0-521-52858-0.Archived from the original on 31 October 2023. Retrieved17 September 2021.Although Eshkol denounced the Egyptians, his response to this development was a model of moderation. His speech on 21 May demanded that Nasser withdraw his forces from Sinai but made no mention of the removal of UNEF from the Straits nor of what Israel would do if they were closed to Israeli shipping. The next day Nasser announced to an astonished world that henceforth the Straits were, indeed, closed to all Israeli ships
↑Human Rights Watch, An Analysis of the Wye River Memorandum
↑Amnesty International, The United States, Israel and the Palestinian Authority: Human Rights Neglected in the Theory and Practice by All Involved in "Peacemaking"
↑Ben-Ami 2007: "Israel’s disproportionate response to what had started as a popular uprising with young, unarmed men confronting Israeli soldiers armed with lethal weapons fuelled the Intifada beyond control and turned it into an all-out war"
↑Sela-Shayovitz, R. (2007). Suicide bombers in Israel: Their motivations, characteristics, and prior activity in terrorist organizations.International Journal of Conflict and Violence (IJCV),1(2), 163. "The period of the second Intifada significantly differs from other historical periods in Israeli history, because it has been characterized by intensive and numerous suicide attacks that have made civilian life into a battlefront."
Dumper & Badran 2024, ப. 2: "In this context we should not overlook the latest turning point in the history of Palestine – the attack by Hamas on 7th October 2023 on Israeli settlements adjacent to Gaza and the subsequent genocidal war that the state of Israel has carried out in the Gaza strip"
Amnesty International (2024).'You Feel Like You Are Subhuman': Israel's Genocide Against Palestinians In Gaza(PDF) (Report). p. 13.Archived(PDF) from the original on 5 December 2024.This report focuses on the Israeli authorities' policies and actions in Gaza as part of the military offensive they launched in the wake of the Hamas-led attacks on 7 October 2023 while situating them within the broader context of Israel's unlawful occupation, and system of apartheid against Palestinians in Gaza, the West Bank, including East Jerusalem, and Israel. It assesses allegations of violations and crimes under international law by Israel in Gaza within the framework of genocide under international law, concluding that there is sufficient evidence to believe that Israel's conduct in Gaza following 7 October 2023 amounts to genocide.
Traverso, Enzo (2024).Gaza Faces History. Other Press. p. 8.ISBN978-1-63542-555-0.The only normative definition we have, codified at the United Nations Genocide Convention of 1948, accurately describes the current situation in Palestine ... describes exactly what is happening in Gaza today
B'Tselem 2025, ப. 86: "The review presented in this report leaves no room for doubt: since October 2023, the Israeli regime has been responsible for carrying out genocide against the Palestinians in the Gaza Strip. Killing tens of thousands of people; causing bodily or mental harm to hundreds of thousands more; destroying homes and civilian infrastructure on a massive scale; starvation, displacement, and denying humanitarian aid — all this is being perpetrated systematically, as part of a coordinated attack aimed at annihilating all facets of life in the Gaza Strip."
↑"Gaza: UN experts call on international community to prevent genocide against the Palestinian people".ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம். 16 November 2023. Archived fromthe original on 24 December 2023. Retrieved22 December 2023.Grave violations committed by Israel against Palestinians in the aftermath of 7 October, particularly in Gaza, point to a genocide in the making, UN experts said today. They illustrated evidence of increasing genocidal incitement, overt intent to "destroy the Palestinian people under occupation", loud calls for a 'second Nakba' in Gaza and the rest of the occupied Palestinian territory, and the use of powerful weaponry with inherently indiscriminate impacts, resulting in a colossal death toll and destruction of life-sustaining infrastructure.
பிழை காட்டு:<ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding<references group="lower-alpha"/> tag was found பிழை காட்டு:<ref> tags exist for a group named "fn", but no corresponding<references group="fn"/> tag was found